Showing posts with label ஜும்ஆ. Show all posts
Showing posts with label ஜும்ஆ. Show all posts

Friday, July 12, 2024

ஆணவக்காரர்களின் முடிவு

 

1446 ம் ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் ஜும்ஆ இது. வருடத்தின் மூன்று பத்து நாட்கள் மகத்துவமானவை. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்கள், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்கள். பொதுவாக நிகழ்வுகள் தான் காலத்தையும் நாளையும் அடையாளப்படுத்துகிறது. நிகழ்வுகளைக் கொண்டு தான் காலமே அறியப்படுகின்றது. நிகழ்வுகளை எண்ணிப்பார்க்காமல் அதனை தனியாக பிரித்து விட்டு காலத்தை மட்டும் ஒருவர் யோசிக்க முடியாது.

Thursday, April 27, 2023

ரமலான் கபூலாகி விட்டதா ?

 

அருள்மிக்க ரமலான் மாதத்தை அடைந்து பகல் காலங்களில் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இன்னும் பல்வேறு அமல்களை செய்த திருப்தியிலும் பெருநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியிலும் நாம் அமர்ந்திருக்கிறோம். இது ரமலான் மாதத்தில் நாம் செய்த அமல்களைக் குறித்து சிந்திக்க வேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒரு நேரம். ஏனென்றால் மிகப்பெரும் சிரத்தை எடுத்து ஒரு காரியத்தை மேற்கொண்டோம், செய்து முடித்தோம். அத்தோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அது வெற்றி பெற வேண்டும். அது நல்ல முடிவைத் தர வேண்டும். அது தான் மிக முக்கியமானது. 

Thursday, April 21, 2022

ரமலான் இறுதிப்பத்து

 

அல்லாஹ்வின் மகத்தான அருளால் புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தின் 20 வது நோன்பில் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் மிக மிக முக்கிய பகுதியாக இருக்கிற இறுதிப் பத்தை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு அடைய இருக்கிறோம்.

Tuesday, July 28, 2020

மாட்டிறைச்சியின் பயன்கள்




(கடந்த வருட ஜும்ஆவில் பேசியது)

அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய மாதங்களில் புனித மாதங்கள் என்றும் கண்ணியம் பொருந்திய மாதங்கள் என்றும் கூறப்படுகிற நான்கு மாதங்களில் ஒன்றான துல்கஅதா நிறைவு பெற்று துல்ஹஜ் பிறந்திருக்கிற தருணம் இது.