நம் சமூகத்து வாலிபர்களை நெறிப்படுத்துவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகள், முன்னெடுப்புக்கள் என்ன என்பதைப் பற்றி பேசி வருகிறோம். மக்தப் மதரஸாக்களை மேப்படுத்துவது நல்ல நட்பை உருவாக்கித் தருவது என இரு விஷயங்களை கடந்த வாரங்களில் பார்த்து விட்டோம். வாலிபர்களை ஒழுங்குபடுத்து வதற்கும் சீர்படுத்துவற்கும் அவர்களை நேரிய பாதையிலிருந்து விலகாமல் பாதுகாப்பதற்கும் நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை அவர்களை எப்போதும் நம்மோடு வைத்துக் கொள்வது. நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வது.