Showing posts with label வாலிபர்கள். Show all posts
Showing posts with label வாலிபர்கள். Show all posts

Thursday, February 2, 2023

இளவல்களோடு இணைந்து பயணிப்போம்

 

நம் சமூகத்து வாலிபர்களை நெறிப்படுத்துவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகள், முன்னெடுப்புக்கள் என்ன என்பதைப் பற்றி பேசி வருகிறோம். மக்தப் மதரஸாக்களை மேப்படுத்துவது நல்ல நட்பை உருவாக்கித் தருவது என இரு விஷயங்களை கடந்த வாரங்களில் பார்த்து விட்டோம். வாலிபர்களை ஒழுங்குபடுத்து வதற்கும் சீர்படுத்துவற்கும் அவர்களை நேரிய பாதையிலிருந்து விலகாமல் பாதுகாப்பதற்கும் நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை அவர்களை எப்போதும் நம்மோடு வைத்துக் கொள்வது. நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வது.

Thursday, January 26, 2023

கூடா நட்பு கேடாய் முடியும்

சமூகத்தின் முக்கிய அங்கமாக இருக்கிற வாலிபர்களை நெறிப்படுத்த வேண்டும், இளம் சமூகத்தை சீர்படுத்த வேண்டும். இன்றைய மோசமான கலாச்சாரச் சீரழிவிலிருந்து அவர்களைப் பாதுகாத்து பழுதுபடாமல் அடுத்த சிறந்த தலைமுறைக்குரியவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் தொடர்ந்து மூன்று வாரங்களாக அது குறித்து சிந்தித்தும் பேசியும் வருகிறோம். வாலிபர்களை நெறிப்படுத்த நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய முதல் தேவை பள்ளிவாசல்களில் காலையும் மாலையும் நடைபெறும் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்கள் போதிக்கப்படுகின்ற மக்தப் மதரஸாக்களை முறைப்படுத்த வேண்டும். அதை மேம்படுத்த வேண்டும் என்று கடந்து வாரம் பேசினோம். அடுத்து நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், இன்றைய வாலிபர்களின் நட்பு வட்டாரத்தை கவனிக்க நோக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த நட்புகளை உருவாக்கித் தர வேண்டும்.