Showing posts with label தீண்டாமை. Show all posts
Showing posts with label தீண்டாமை. Show all posts

Thursday, September 7, 2023

தீண்டாமையை ஒழித்த இஸ்லாம்

 


உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது. இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. நபி அவர்களை சமுதாத்தின் மிகச்சிறந்த தலைவர் என்றும் வாழ்க்கையின் மிக உயர்ந்த முன்னோடி என்றும் சமூகத்தின் ஈடுஇணையற்ற வழிகாட்டி என்றும் உலகில் அனைவரும் தங்களின் முன்மாதிரியான எடுத்துக் கொள்ள வேண்டிய மகத்தான மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்கும் பலர், அதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிடும் முதன்மையான விஷயம் நபி அவர்கள் ஏற்படுத்திய சமத்துவம் தான். முஹம்மது நபியின்  இந்த மகத்தான வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் கொண்டிருந்த கொள்கை உறுதியும் யாருக்காகவும் எதற்காகவும் கொள்கையில் பின்வாங்காத அந்த கொள்கைப் பிடிமானமும். இரண்டாவது காரணம் அவர்கள் போதித்த சமத்துவம் என்று எஸ். எச். லீடர் என்ற மாற்றுமத அறிஞர் குறிப்பிடுகிறார்.