عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا
سَأَلَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَهَا
أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللهُ تَعَالَى عَلَى مَنْ يشَاءُ، فَجَعَلَهُ اللهُ
تَعَالَى رَحْمَةً لِلْمُؤْمِنينَ، فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ فِي الطَّاعُونِ، فَيَمْكُثُ
فِي بَلَدِهِ صَابرًا مُحْتَسِبًا يَعْلَمُ أَنَّهُ لَا يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ
اللهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ
அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; பிளேக் நோய் பற்றி நபி ﷺ அவர்களிடம் நான் கேட்டேன். தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தும் வேதனையாகும். மேலும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதை அல்லாஹ் அருளாக ஏற்படுத்தி இருக்கிறான். தனக்கு அல்லாஹ் விதித்ததைத் தவிர நோய் ஏற்படாது என்பதை அறிந்து நோய் ஏற்பட்ட அந்த ஊரிலேயே பொறுமையாக நன்மையை எதிர் பார்த்தவனாக இருக்கும் ஒரு அடியானுக்கு ஷஹீதுடைய கூலியைப் போன்றது உண்டு என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.