இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நாம் வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் நபிகள் பெருமானார் ஸல் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் எதைக்குறித்து பேசுவதானாலும் நபியைத் தொடாமல் நபியின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டாமல் அவர்களை உதாரணப் படுத்தாமல் நாம் பேசி விட முடியாது.அப்படி பேசினாலும் அது மார்க்கமாக ஆகாது.