இஸ்லாம் பாராட்டும் உயர்ந்த குணங்களில் ஒன்று வீரமும் துணிவும். யாருக்கும் அஞ்சாமல் எதையும் துணிவோடு எதிர் கொள்கின்ற குணம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டும். அது ஒரு முஃமினின் பண்பு என்று இஸ்லாம் கூறுகின்றது.
இஸ்லாம் பாராட்டும் உயர்ந்த குணங்களில் ஒன்று வீரமும் துணிவும். யாருக்கும் அஞ்சாமல் எதையும் துணிவோடு எதிர் கொள்கின்ற குணம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டும். அது ஒரு முஃமினின் பண்பு என்று இஸ்லாம் கூறுகின்றது.
கடந்த வாரம் இன்றைய காலத்து நம் வாலிப சமூகம் வீண் விளையாட்டுக்களிலும் கூத்து கும்மாளங்களிலும் வீணான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சாதிக்க வேண்டிய பருவமாக இருக்கிற வாலிபத்தை அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொபைலுக்கும் இன்டர்நெட்டுக்கும் கேம்ஸுக்கும் சினிமாவிற்கும் போதைக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கோடிட்டுக் காட்டினோம். இந்த ஆபத்தான சூழலிலிருந்து அவர்களைக் காக்க நம் வாலிபச் சமூகத்தை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் ? என்பதைக் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்து சிந்திக்க இருக்கிறோம்.
ஷவ்வால் மாதத்தினுடைய 2 வது ஜும்ஆ இது.ஷவ்வால் மாதம் என்பது உலகம் முழுக்க அரபு மதரஸாக்கள், அல்லாஹ்வின் வேதமும் அண்ணல் நபியின் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்ற அரபுக்கல்லூரிகள் மற்றும் மக்தப் மதரஸாக்கள் திறக்கப்படுகிற ஒரு நேரம். இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் இஸ்லாமியக்கல்லூரிகள் திறக்கப்படுகின்ற, அதன் புதிய ஆண்டை தொடங்கயிருக்கிற நேரம் இது.