Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts
Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts

Friday, November 22, 2024

ஜும்ஆ உரைக்கு முன் அனுமதியா?

 இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் மக்களுக்கு ஏற்ற மார்க்கம் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுத்த மார்க்கம் மனித உயிர்களையும் மனித உரிமைகளையும் மனித உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உணர்த்திய மார்க்கம். மனித உரிமை  என்ற சொல்லுக்கு பல விதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்படுகிறது.இருந்தாலும் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், தான் எவ்வாறு வாழ வெண்டும் என்று விரும்புவானோ, ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போனோ ஆசைப்படுவானோ அவை அனைத்திற்கும் பெயர் தான் மனித உரிமைகள்.