Sunday, September 29, 2013

இஸ்லாமிய கீதம்

பிஞ்சிக் கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ்.
 என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ். [2-தடவை]

 ஏழு வானமும், கரு நீள பூமியும், சுவாசக் காற்றையும் தந்த ரப்புல் ஆலமீன்.
 பிஞ்சிக்கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ். என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ். 


 காணாமல் கல்புக்குள் இருக்கின்றவன். 
கலிமாவால் நாவுக்குள் இனிக்கின்றவன். 
 யார் யார்க்கு எதுவென்று விதிக்கின்றவன்.
எல்லோர்க்கும் அருள் தந்து காக்கின்றவன்.
 மறை வழி என்னை நடத்திடுவாய். இந்தஇம்மையும் மறுமையும் காட்டிடுவாய்.

 இளம் பிஞ்சிக் கைகளை ஏந்துகிறேன் யாஅல்லஹ்.என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ்.

 நான் செய்த பிழையாவும் பொறுப்பாய் அல்லாஹ், 
என் தொழுகைக்கு செவி சாய்த்து அருள்வாய் அல்லாஹ்.
 முஃமின்கள் ஒன்றாக முன்னேறவே 
ஆன்மீக வழி தன்னை காட்டிடுவாய். 
 அருளும் அன்பும் நிறைந்தவனே என் நேசத்தின் வாசத்தில் மகிழ்பவனே. 

இளம் பிஞ்சிக் கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ் என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ்,

 யா அல்லாஹ் யா அல்லாஹ் யா ரஹ்மான் யா ரஹீம்.

No comments:

Post a Comment