Tuesday, March 4, 2014

கதை- கோடாரிக்காரன்.

                                                                                                                                          
ஒரு விறகு வெட்டி ஒரு ஆத்தங்கர ஓரமா போயிக்கிட்டு இருந்தான். அப்ப திடீர்னு கையில வச்சிருந்த கோடாரி அந்த ஆத்துல விழுந்திடுச்சி.உடனே அவன் அய்யோ அம்மான்னு கத்துனான். என் கோடாரி போச்சே என் கோடாரி போச்சே யாராவது உதவி செய்யுங்களேன்னு சத்தம் போட்டான்.

அப்ப திடீர்னு ஒரு உருவம் வந்துச்சி. வந்து, என்ன வேணும்னு கேட்டுச்சி.
என்னோட இரும்புக்கோடாரி ஆத்துல விழுந்துடுச்சி, அத எடுத்துத் தரனும்னு சொன்னான்.

உடனே அந்த உருவம் அவன சோதிக்கிறதுக்காக உள்ளே போய் ஒரு வெள்ளி கோடாரிய கொண்டு வந்துச்சி.

அதப்பாத்தவுடன இது என்னோட கோடாரி இல்லயே அப்டின்னு சொன்னான்.

பரவாயில்லயே ரொம்ப நியாயமானவா இருக்குரியே அப்டின்னு சொல்லிட்டு திரும்பவும் உள்ளே போய் ஒரு தங்க கோடாரிய கொண்டு வந்துச்சி.

அப்ப அவன் இதுவும் என் கோடாரி இல்லன்னு சொன்னான்.

அட நீ இவ்ளோ யோக்கியனா அப்டின்னு சொல்லிட்டு திரும்பவும் உள்ள போய் ஒரு வைர கோடாரிய கொண்டு வந்துச்சி.

அதப்பாத்து இதுவும் என் கோடாரி இல்லன்னா.

அதுக்கு அந்த உருவம் பரவா இல்லியே உலகத்துல ஒன்ன மாதிரி ஒரு யோக்கியன நான் பாத்ததே இல்ல அப்டின்னு சொல்லி அவனப்பாராட்டி கொண்டு வந்த எல்லா--- கோடாரியையும் அவன்டயே கொடுத்துட்டு போயிடுச்சி.

அவன் சந்தோஷமா அத எடுத்துட்டு போனான்.                                                                       
திரும்ப மறுபடியும் அதே ஆத்தங்கர வழியாக அந்த விறகு வெட்டி தன் மனைவியோட வந்தான்.அந்த தடவ அவனோட மனைவி கால் தவறி உள்ள விழுந்துட்டா.அப்பவும் அவ அய்யோ அம்மான்னு கத்துனான்.

திரும்பவும் அதே உருவம் வந்துச்சி வந்து என்ன வேணும்னு கேட்டுச்சி.

அதுக்கு அவன் ; என் மனைவி உள்ள விழுந்துட்டா அவள காப்பதனும்னு சொன்னான்.

உடனே அந்த உருவம், உள்ள போய் அவன சோதிக்கிறதுக்காக அவனோட மனைவியை விட அழகான ஒரு பொண்ண கொண்டு வந்துச்சி.

அப்ப அவன் பதரிப்போய் இவதான் என் மனைவின்னு சொன்னான்.

அதுக்கு அந்த உருவம் ; அடப்பாவி உன்னப்போய் யோக்கியன்னு நினைச்சனே! இதுக்கு முன்னாடி கோடாரிய மாத்தி  எடுத்துட்டு வந்தப்போ இது என் கோடாரி இல்ல, இது என் கோடாரி இல்லன்னு நியாயமா நடந்துகிட்டஆனா இப்ப அழகான ஒரு பொண்ணபாத்தவுடன இவ தான் என் மனைவின்னு சொல்லிட்டியே ச்சே---  அப்டின்னு அந்த உருவம் கேவலமா சொல்லிச்சி.

அப்ப அந்த விறகு வெட்டி சொன்னான் ; எதுக்கு வம்பு. இவ என் மனைவி இல்லன்னு சொல்லுவேன். நீ உடனே அத வுட அழகான ஒரு பொண்ண கொண்டு வருவ. அவளயும் நான் என் மனைவி இல்லன்னு சொல்லுவேன்.நீ அத விட இன்னும் அழகான ஒரு பொண்ண கொண்டு வருவ அவளையும் நான் என் மனைவி இல்லன்னு சொல்லுவேன்.
பரவாயில்லியே ரொம்ப யோக்கியனா இருக்கிறியேன்னு சொல்லி என்ன பாராட்டுறங்குர பேருல அந்த எல்லா பொண்ணயும் என் தலைல கட்டிட்டு போயிடுவே.இங்க ஒருத்திய வச்சே சமாளிக்க முடியல  எல்லா பொண்ணயும் வச்சி நான் என்ன பன்றது அதனால தான் அப்டி பொய் சொன்னேன்னு அந்த விறகு வெட்டி சொன்னான்.


1 comment: