Showing posts with label இறை நம்பிக்கை. Show all posts
Showing posts with label இறை நம்பிக்கை. Show all posts

Monday, April 4, 2022

நம்பிக்கையை கை விட வேண்டாம்

 

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا   وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ

அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு  எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் : 3:173)

Sunday, September 6, 2020

இறைவனை எப்படி நம்ப வேண்டும்

 


        (குடியுரிமைப் பிரச்சனையின் போது பேசிய ஜும்ஆ உரை)

நம் நாட்டில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் மசோதாக்களையும் கருத்தில் கொண்டு இது மாதிரியான சட்டங்களால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை எதிர் கொள்வதற்கு நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த மாதிரியான சட்டங்களால் நாம் பாதிக்கப்படாமல் வரும் காலங்களில் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற நாமென்ன அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்று சிந்திப்பதும் யோசிப்பதும் காலத்தின் கட்டாயம்.

Monday, June 29, 2020

குடியுரிமை சட்டத்தைப் பற்றி பயம் வேண்டாம்



நாட்டிலே தற்போது அச்சுறுத்தலான சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்கின்ற சூழ்நிலைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்தி விட்டார்கள். அந்த சட்டத்தை நிலை நிறுத்துவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஒன்றன்பின் ஒன்றாக அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.