Showing posts with label இறைவன் கொடுத்தது. Show all posts
Showing posts with label இறைவன் கொடுத்தது. Show all posts

Thursday, December 22, 2022

இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கூலியா ?

 

அல்லாஹுத்தஆலா பூமியில் மனிதனைப் படைத்து மனித வாழ்க்கைக்குத் தேவையான மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான அனைத்தையும் அவனே வழங்கியிருக்கிறான். பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்தும் ரப்புல் ஆலமீன் தந்தவை. உண்ணும் உணவு, தங்கும் இருப்பிடம், உடுத்தும் உடை,செலவழிக்கும் பணம், அறிவு,ஆற்றல்,திறமை,நம் பேச்சு முதல் மூச்சு வரை அனைத்தும் இறைவன் அளித்தவை. நம் கையில் இருப்பவை அனைத்தும் நம் உடமை அல்ல, இறைவுடைமை. இந்த சிந்தனை நமக்கு வேண்டும்.