Showing posts with label ஏழை. Show all posts
Showing posts with label ஏழை. Show all posts

Wednesday, April 27, 2022

யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம்

(இன்றுடன் தராவீஹ் குறிப்புகளை நிறைவு செய்கிறேன். இது வரை நான் பதிவிட்ட குறிப்புகளைப் பார்த்து எனக்காக துஆ செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மேலான துஆவில் என்றைக்கும் என்னை மறந்து விட வேண்டாம்) 

عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏

(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) (அல்குர்ஆன் : 80:1)

اَنْ جَآءَهُ الْاَعْمٰى‏

தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. (அல்குர்ஆன் : 80:2)