Thursday, October 3, 2013

சிறுவர் பயான் ; வரதட்சணை

அஸ்ஸலாமு அலைக்கும்,சிறப்பிற்குரிய இந்த விழாவை நடத்திக்கொண்டிருக்கும் தலைவர் அவர்களே,மேடையில் அமர்ந்திருக்கும் பெரியவர்களே,நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிற ஆலிம் அவர்களே மற்றும் கேம்பல் ஈன்றெடுத்த இளம் சிங்கங்களே,தாய்மார்களே பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஸலாத்தைக் கூறி என் உரையை துவங்குகிறேன்.

இந்த சிறப்பிற்குரிய விழாவில் வரதட்சணை ஒரு சமுதாயக் கொடுமை என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். 


கண்ணியமானவர்களே வரதட்சணை என்ற பெயரை சொல்வதற்கே நாவு கூசுகிறது.அந்த அளவுக்கு அது ஒரு கடுமையான வார்த்தை.ஆனால் இன்றைக்கு வரதட்சணை இல்லாத திருமணமே கிடையாது என்று சொல்கிற அளவுக்கு இந்த கொடிய உயிர் கொல்லி நோய் சமுதாயம் முழுக்க பரவியிருக்கிறது.வருவதற்கு தட்சணை அதாவது ஒரு பெண் கணவன் வீட்டிற்கு வருவதற்கு தட்சணை கேட்கிறார்கள்.அதற்குத்தான் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு வரதட்சணை என்ற பெயரில் 1 லட்சம் 2 லட்சம் 50 சவரன் 100 சவரன் என்று பெண் வீட்டாரிடமிருந்து வாங்கி அவர்களை கசக்கி பிழியக்கூடிய நிலை உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறது.இதை கவுரவ பிச்சை என்று கூட சொல்லலாம். ரோட்டில் பிச்சை எடுப்பதற்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அவர்கள் ரோட்டில் இவர்கள் வீட்டில் அவ்வளவு தான். 

கல்யாணத்திற்கு பெண் பேசுகிற போதே மாப்பிள்ளையை பெற்ற தாய்மார்கள் சொல்வார்கள் என் மகன் ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கப்போறான் அது ஒரு லட்ச ரூபா கொடுத்துறங்க, என்மகன் வெளி நாட்டுக்கு போகப்போறான் அதுக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்துறுங்க கல்யாணத்த முடிச்சர்லாம் என்று கூறுவார்கள். நான் கேக்குறேன் இப்படி பெண் வீட்டாரிடம் கையேந்தித்தான் பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்றால் அந்த கேடு கெட்ட பிஸ்னஸ் எதுக்கு? அந்த கேடு கெட்ட கல்யாணம் எதுக்கு? சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

 ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நடந்தது. சீர்வரிசை சாமான்களெல்லாம் வந்து இறங்கியது.அந்த பெண் அந்த சாமான்களை தன் தோழிகளுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.அந்த வேடிக்கையை கொஞ்சம் பாருங்க.இதோ ஃபிரிட்ஜ் இது என் மாமா 15000 கொடுத்து வாங்கித்தந்தாரு.இதோ வாஷிங் மெஷின் இத என் அண்ணன் 20000 கொடுத்து வாங்கித்தந்தாரு.இதோ ஏர் கூலர் இத என் பெரிய வாப்பா 30000 கொடுத்து வாங்கித்தந்தாரு.இதோ நிக்கிதே என் புருஷன் இத என் வாப்பா 5 லட்சம் கொடுத்து வாங்கித்தந்தாரு.இந்த கேவலம் தேவையா ?இந்த இன்ஸல்ட் தேவையா? 

அருமையான தாய்மார்களே சிந்தித்துப் பாருங்க. இன்றைக்கு பெண் வீட்டாரிடமிருந்து பெட்டி பெட்டியாக வாங்கிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மையில் மூட்டை மூட்டையாக கொடுக்க வேண்டியது நாம் தான். ஏனென்றால் மணப்பெண்ணாக வரக்கூடிய அந்த பெண்மனி கண்மனி அது வரை கண்ணியமாக வாழ்ந்திருப்பாள் ஆனால் நம் வீட்டுக்கு வந்த பிறகு நம் துணிகளை துவைக்கும் வண்ணானாக மாறுகிறாள்,நமக்கு உணவுகளை சமைக்கும் சமையல் காரியாக மாறுகிறாள்,நமது வீட்டை சுத்தம் செய்யும் வேளைக்காரியாக மாறுகிறாள்,நமது குழந்தைகளை கவணிக்கும் ஆயாவாக மாறுகிறாள்,இதெற்கெல்லாம் நாம் எத்தனை லட்சத்தைக் கொடுக்கிறோம்,அதை விட மேலாக பத்துமாதம் சுமந்து வேதனைகளை அனுபவித்து செத்துப் பிளைத்து நமது குழந்தைகளை பெற்று தன் ரத்தத்தையே பாலாக கொடுக்கிற அந்த தியாகிக்கு நாம் எத்தனை கோடிகளை கொடுக்கப்போகிறோம்.ஆனால் அதையெல்லாம் நினைத்துப்பார்க்காமல் அவர்களிடமிருந்தே பிடிங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோமே. கொஞ்சம் கூட வெட்கப்பட வேண்டாமா இளைஞர்களே யோசித்துப்பாருங்கள். 

 இன்றைக்கு எத்தனை பெண்மனிகள் தற்கொலை செய்கிறார்கள்? எத்தனை பெண்மனிகள் திருமண வயதை கடந்த பிறகும் வரண் கிடைக்காமல் திருமணம் முடிக்காமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பெற்றோர்கள் குமருக்கு உதவி செய்யுங்கள் என்று வீடு வீடாக யாசகம் கேட்கிறார்கள்?  
இன்னும் எத்தனை பேர்கள் தங்கள் சொந்த வீட்டை விற்று மகளை கட்டிக் கொடுத்து விட்டு நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்?
இந்த சாபமெல்லாம் யாருக்கு? கொஞ்சம் கூட யோசிக்காமல் வாங்கிக்கொண்டிருக்கிற நமக்குத்தானே சிந்துத்துப்பார்க்க வேண்டும். 

பெண்களுக்கு அவர்களது மகளை குவியலாக கொடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.இன்றைக்கு நாம் 501 1001 என்று சல்லிக்காசை மகராக சபையில் கொடுத்து விட்டு கொள்ளைப்புறமாக 1 லட்சம் 5 லட்சம் என்று வாங்கிக்கொள்கிறோமே இதற்கு பெயர் தான் மகரா?

 ஒரு பெண்மனி பொருள், வம்சம்,அழகு, மார்க்கம் இந்த நான்கு விஷயங்களுக்காக உலகில் திருமணம் முடிக்கப்படுகிறாள்.ஆனால் நீங்கள் மாரக்கமுள்ள பெண்ணை தேர்வு செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஆனால் இன்றைக்கு இந்த வம்சமா அந்த வம்சமா அவ்ளோ போடுவாங்களா இவ்ளோ போடுவாங்களா என்று தான் பார்க்கிறோமே தவிர தொழக்கூடிய பெண்ணா ஓதக்கூடிய பெண்ணா நல்ல ஒழுக்கமுள்ள பெண்ணா யாரும் பாக்கிறதில்ல.இப்டி பணத்தை மட்டும் பார்க்கிற காரணத்தினால்தான் இன்றைக்கு பல குடும்பங்களில் ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது.அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 

கண்ணியத்திற்குரியவர்களே இந்த பகல் கொல்லயான வரதட்சணை என்ற பேய் எப்டி வந்தது எண்றால் முதன் முதலாக அது பிராமண சமுதாயத்திலிருந்து தான் தோன்றியது பிறகு தான் அது மற்ற சமுதாயத்தில் ஊடுறுவியது என்று சொல்லப்படுகிறது.இந்த கொடிய வரதட்சணை என்ற சிக்கன் குனியா நோய் நம்மிடத்தில் பரவி விட்டது என்பது தான் வேதனையான விஷயம்.

 இன்று நம்மில் ஒருவர் எதுவும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று சொன்னால் கூட அவரிடம் ஏதோ குறை இருக்கிறது அதனால் எதுவும் வேண்டாம் என்று கூறுகிறார்.என்று சொல்லுகிற சமுதாயமாகவல்லவா மாறிவிட்டோம்.

 அதுமட்டுமல்ல இன்று பல முஸ்லிம்களே தங்கள் பெண் பிள்ளைகளை மாற்று மதத்தவர்களுக்கு திருமணம் முடித்துக்கொடுக்கிறார்கள். காரணம் கேட்கிற போது முஸ்லிம்கள் கேட்கிற வரதட்சணையை எங்களால் கொடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.அன்பானவர்களே இந்த விபச்சார உறவுக்கு வரதட்தணை வாங்குகிற எல்லோரும் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். 

 எனவே கண்ணியமானவர்களே இனியாவது இந்த வரதட்சணை என்ற கொடிய பாவத்தை விடுவோம்.இன்ஷா அல்லாஹ் நான் எனது திருமணத்தில் ஒரு பைசா கூட வாங்க மாட்டேன் முடிந்த வரை நான் அதிகம் மஹர் கொடுத்து திருமணம் முடிப்பேன் என்று முடிவு செய்து விட்டேன். இளைஞர்களே நீங்களும் முடிவு செய்யுங்கள். அல்லாஹுத்தஆலா நமது சமுதாயத்தை வரதட்சணையில்லாத சமுதாயமாக மாற்றுவானாக.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்

    மஹரை என்பதற்க்கு பதிலாக எழுத்து பிழை மகளை என்று உள்ளது.

    ReplyDelete