Thursday, November 8, 2018

நினைவு யாவும் உங்கள் மீது



நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி        (2 தடவை)
அகிலம் எங்கும் ஒளி தெளித்த யாரசூலல்லாஹ்

மதினா நகர்க்கொருநாள் நான் வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நபியெனும் அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியன அங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே       (2 தடவை)
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே....  (நினைவு யாவும்)

காணும் வரையில் கண்கள் தூங்காது
காதலில் எந்த உள்ளம் தான் ஏங்காது ???
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும்   மாறுவேன்               (2 தடவை)
உம்மத்தென்ற  பெருமையோடு வந்து சேருவேன்...               (நினைவு யாவும்)

உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
உம்மீ    ரசூலே உங்கள் புகழ் பாடும்
அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
அல்லாஹ் போற்றும் மனித அனுகூலம்
இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே (2 தடவை)
இறுதித் தூதராக வந்த இறையின் காணமே....            (நினைவு யாவும்)

No comments:

Post a Comment