Friday, August 30, 2024

மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்

 


அல்லாஹுத்தஆலா வாழ்வியல் நெறியாக உலக மக்களுக்கு இஸ்லாத்தைத் தந்திருக்கின்றான். இஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம். எல்லா காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம்.

Friday, August 23, 2024

சீரழிவை நோக்கி பயணிக்கும் நம் இளவல்கள்

 

அல்லாஹுத்தஆலா மனித வாழ்வை மூன்று பருவங்களைக் கொண்டு அமைத்திருக்கின்றான். 1.குழந்தைப் பருவம் 2.வாலிபப் பருவம் 3.முதுமைப் பருவம்.இதில் ஆற்றலும் வலிமையும் துடிப்பும் உற்சாமும் மிக்க பருவம் வாலிபப் பருவம். அனைவராலும் ஆசை கொள்ளப்படுகின்ற அனைவரும் எதிர்பார்க்கின்ற ஒரு பருவம் இளமைப் பருவம். வேகமாக வளர்ந்து வாலிபர்களாக ஆகி விட மாட்டோமா என்று சிறுவர்களும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு அந்த பருவம் வழங்கப்பட மாட்டாதா என்று முதியோர்களும் ஏங்கும் பருவமாக இந்த இளமை பருவம் இருக்கிறது.

Friday, August 9, 2024

வட்டியின் கோர முகம்

 கடந்த வாரத்தின் தொடர்....

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை இந்த பூமியில் படைத்து நம் வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்திருக்கின்றான். கடந்த காலத்து மனிதர்களை விட அனைத்திலும் அல்லாஹ் நம்மை உயர்வாகவே வைத்திருக்கின்றான். நிறைய வசதிவாய்ப்புக்களை தந்திருக்கின்றான். வாழ்வின் எல்லா சௌகரீகங்களையும் வழங்கியிருக்கின்றான். கடந்து காலத்து மனிதர்கள் சௌகரீகங்கள் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.மன நிறைவான வாழ்வைப் பெற்றிருந்தார்கள்.ஆனால் இன்றைக்கு அனைத்து வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியும் இல்லை.மனநிறைவான வாழ்வும் இல்லை. காரணம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றினார்கள்.நாம் பின்பற்றுவதில்லை. அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து வாழ்ந்தார்கள். நாம் அல்லாஹ்விற்கு பயப்படுவதில்லை. பொருளாதாரத்தைத் தேடுவதில் பேணுதல் இல்லை.