Showing posts with label பத்ர். Show all posts
Showing posts with label பத்ர். Show all posts

Monday, March 17, 2025

தராவீஹ் 17 - பத்ர் தரும் படிப்பினைகள்

இன்று பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தினமாக இருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்க்களம் பத்ர். இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கும் உலகம் முழுக்க பரவி விரவுவதற்கும் காரணமான ஒரு போர்க்களம். பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் அந்த போர்க்களத்தின் வழியாக ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கினான். அவற்றில் சிலதை நாம் இன்றைக்கு சிந்திக்கலாம்.

Wednesday, March 27, 2024

பத்ர் வரலாறு

மக்காவிலிருந்து அபூ ஸுஃப்யானின் தலைமையில் ஷாமிற்கு சென்று அங்கிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

Monday, April 18, 2022

தனித்துவம் பெற்ற பத்ர் ஸஹாபாக்கள்

 

இன்று ரமலான் பிறை 17. இஸ்லாத்தின் முதல் போர்க்களமான பத்ரில் கலந்து கொண்ட வீர தியாகிகளின் நினைவு தினம் இன்று. பத்ர் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மிக முக்கியமான, இஸ்லாமிய சரித்திரத்தில் தனிப்பெரும் முத்திரை பதித்த, இஸ்லாத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த, இஸ்லாம் உலக அரங்கில் தடம் பதிப்பதற்கும்  இன்று வரை வளர்ந்தோங்குவதற்கும் இனி கியாமத் வரை  நிலை நிற்பதற்கும் காரணமான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு.