Showing posts with label ஷைத்தானின் சூழ்ச்சி. Show all posts
Showing posts with label ஷைத்தானின் சூழ்ச்சி. Show all posts

Wednesday, December 4, 2013

ஷைத்தானின் சூழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன். அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு வதஆலா தன் அருள் மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபின் ஓர் இடத்தில்- وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ  وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
இறைவா ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும்,அந்த ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என்று கூறுகிறான்.