Wednesday, October 23, 2013

வியாபாரத் திருமணம்

                                                                                     

தரகர்  ;  அஸஸலாமு அலைககும் பாய் !...       

பாய்    ;   அலைக்குமுஸ்ஸலாம். என்னய்யா இந்த பக்கம்---காய் கறி வாங்கவா?                        

தரகர்  ;  ---பாம் வைக்க. ஏம் பாய் மார்கட்டுக்கு காய் கறி வாங்க வராம--- பாம் வைக்கவா வருவாங்க----                                                                                                                       பாய்   ;  இல்லயா சும்மாதான் கேட்டேன்.                                                                                                                          

 தரகர் ;  ஏன் பாய் சும்மா கேக்குறீங்க. இந்த கல்ல வேணும்னா தலைல வச்சிட்டு கேக்க வேண்டியதானே.                                                                                                                                பாய்  ;  ஏன் யா கேக்குறது தப்பா ?                                                                                                                                                  

தரகர்   ;  சாரி பாய், சரியா தப்பான்னு பாக்குறதுக்கு...... நான் ஒன்னும் டீச்சர் இல்ல.வேணும்னா ஒரு டீச்சர கூப்புட்டு கேளுங்க. அவங்க கரைக்டா சொல்லுவாங்க.       பாய்    :  ஏம்பா உன் கிட்ட தெரியாம கேட்டுட்டேன்.என்ன மன்னிச்சிரு.                                       

தரகர்  ;  தெரியாம இருந்தாதான் கேப்பாங்க.பின்ன என்ன தெரிஞ்சிகிட்டேவா கேப்பாங்க?  பாய்    ;  யோவ் ஏன் யா என் உசுர போட்டு வாங்குற?      

தரகர்  ;  உங்க உசுரு என்ன கத்திரிக்காயா இல்ல முருங்கக்காயா?வாங்கி குழம்பு வச்சி சாப்பிடுறதுக்கு.   

பாய்    ;  ஏன் யா உன் லொள்ளுக்கு ஒரு அளவே கிடையாதா?     

தரகர்  ;  சாரி பாய் நான் தராசுலாம் ஒன்னும் கொண்டு அதனால அளந்துலாம் பாக்க முடியாது.                                                                                                           

பாய்    ;அய்யோ.....முடியல.         

தரகர்  ;  முடியலன்னா போயிட்டு வாங்க பாய்--- அப்புறம் இங்கயே இருந்துறப்போறீங்க.     பாய்    ;    ஸ்ஸ்ஸ்--               

தரகர் ;  என்ன  டயர் எதுவும் பஞ்சராயிடுச்சா?                   

பாய்   ;  ---என் வாய் பட்சராயிப்போச்சி. நீ ஒரு மனுஷன்னு உன் கிட்ட வந்து பேசுனம்பாரு என்ன செருப்பாலயே---- அடிக்கனும்.  

தரகர் ;  சாரி பாய் நான் செருப்பு போட்டுட்டு வரல்ல. வேண்ணா உங்க செருப்ப கலட்டிக் கொடுங்க நாளு சாத்து சாத்துறேன்.                 

பாய்   ;  ஏய்யா உன் கிட்டலாம் மனுஷன் பேச முடியாது.ஆள வுடு நான் வர்ரேன்.        

தரகர்  ;  சரி பாய் சரி பாய் கோவப்படாதீங்க.சும்மா தமாஷ் தான் பன்னுனேன்.சொல்லுங்க என்ன விஷயம்?  

பாய்   ;  ஏய்யா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு நினச்சா நீ பாட்டுக்கு தமாஷ் அடிச்சிட்டு இருக்கிற.    

தரகர்  ; சரி பாய் சொல்லுங்க என்ன விஷயம். நான் தான் மன்னிப்பு கேட்டன்ல.

பாய்    ; ஒன்னுமில்லயா----என் பையனுக்கு ஒரு நல்ல பொண்ணா இருந்தா சொல்லு.        

தரகர்  ; அதுக்கு என்ன பாய் பாத்துறுவோம். கவலைய விடுங்க.நீங்க நம்ம  ஃப்ரண்ட்--- உங்களுக்கு பாக்காம வேற யாருக்கு பாக்க போறேன்.சரி உங்க பையன் என்ன பன்றான் பாய்.    

பாய்    ;  என்னய்யா இப்டி கேட்டுபுட்டஎன் பையன் பெரிய V I P ய்யா--

தரகர்  ;  V I P யா---அப்டின்னா.     

பாய்    ;  V I P ன்னா---- வி ஃபார் வேளை ஃபார் இல்ல பி ஃபார் பட்டதாரி வேளையில்லா பட்டதாரின்னு அர்த்தம்.       

தரகர்  ;  அடத்தூஏன் பாய் இதுக்குத் தான் இந்த பில்டப்பா.    

பாய்    ;   சரிய்யா என் பையனுக்கு நல்ல பெரிய இடமா பாரு.          

தரகர்  ;  பெரிய இடம்னா எப்டி--- இந்த கிரவ்ண்ட் மாதிரி போதுமா--- இல்ல இத வுட பெரிய இடமா வேணுமா.     

பாய்     ;  ஏய்யா மறுபடியும் உன் குசும்ப ஆரம்பிச்சிட்டியா. பெரிய இடம்னா  நிறைய பணம் உள்ள இடமா பாருய்யா.     

தரகர்  ;   நிறைய பணம் உள்ள இடத்த எங்க போய் தேடுறது. பேங்கத்தான் புடிச்சி கட்டி வைக்கனும். [மவ்னமாக]    சரி பாய் ரண்டு இடம் இருக்குது----ஒரு இடத்துல 2 லட்சம் ரொக்கமும் 10 பவுன் நகையும் போடுவாங்க. பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்கும்.இன்னொரு இடத்துல 3 லட்சம் ரொக்கமும் 20 பவுன் நகையும் போடுவாங்க ஆனா பொண்ணு அத வுட கொஞ்சம் கருப்பா இருக்கும்.எந்த பொண்ணு பாய் வேணும்.

பாய்     ;    அத வுட கருப்பா ஏதாவது பொண்ணு இருந்தா பாருயா.                             

தரகர்  ;  ஏம் பாய் நீங்களா ஒரு அப்பனா

பாய்     ;   சரி சரி கோவிச்சிக்காத.ரொம்ப வேணாம்யா ஒரு 1 லட்சம் 10 பவுன்ல சிம்பிலா ஒரு இடம் பாருய்யாபோதும்.           

தரகர்  ; ஏம் பாய் 1 லட்சம் 10 பவுனுங்றது உங்களுக்கு சிம்பிலா.அது சரி----உங்க பையனுக்கு வேளை வெட்டி  இல்லாமயே இவ்வளவு கேக்குறீங்களே.ஒரு வேளை கெடச்சா எவ்வளவு கேப்பீங்க.  

பாய்    ; அது----கிடைக்குற வேளைய பொறுத்து தான் இருக்குது.         

தரகர்  ;  நல்ல புள்ள நல்ல அப்பய்யா--- மொத்தத்துல இது கல்யாணம் இல்ல வியாபாரச் சந்ததான்.          

பாய்   ;   யோவ் வள வளன்னு பேசாதயா.உன்னால முடியுன்னா சொல்லு.இல்லன்னா  நான் வேற ஆளப் பாத்துக்குறேன்.         

தரகர்  ;    சரி பாய் நீங்க சொன்ன மாதிரியே பன்னிரலாம்.இன்னும் ஒரு வாரத்துல பாத்துட்டு வர்ரேன்

பாய்    ; யோவ் முக்கியமா பொண்ணு தளதளன்னு இருக்கனும் ஆமா--

தரகர்  :  பாய் தளதளன்னு இருக்கனும்னா பேசாம உங்க மகனுக்கு ஒரு முகம் பாக்குற கண்ணாடிய வாங்கிக் கொடுங்க அதான் தளதளன்னு இருக்கும்.அதப்பாத்துகிட்டே இருக்கட்டும்.ஏம் பாய் நீங்க வேற.

பாய்  ;  சரிய்யா ஏதாவது பாத்துட்டு வாய்யா போயா.       

தரகர்  ;  பாத்தீங்களா சகோதரர்களே என்னமோ நாங்க தான் முஸ்லிம்,எங்க மார்க்கம் தான் உண்மையான மார்ககம்,எங்க வேதம் தான் உண்மையான வேதம்னு இந்த முஸ்லிம்கள் பீத்துறாங்களே....இப்படி திருமணத்த வியாபாரமா ஆக்கி்ட்ட இவங்கள்ளாம் என்ன முஸ்லிம் த்து.....                                                  

                                                                                                                                                                                                                                                                                                                                  
 

2 comments: