Friday, June 28, 2024

சுயமரியாதையை கற்றுத் தந்த இப்ராஹீம் அலை அவர்கள்

இந்த உலகத்தில் இறைவனின் படைப்புக்கள் ஏராளம் உண்டு.மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்துப் படைப்பினங்களை விட மனிதனே கண்ணியமானவன்.உயர்ந்தவன்.

Friday, June 21, 2024

பிள்ளைகளின் வாழ்வை அழித்து விட வேண்டாம்

அல்லாஹ் நம் வாழ்வில் நமக்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கியிருக்கிறான். இஸ்லாம், ஆரோக்கியம், பொருளாதாரம், ரிஸ்க், நீர், குழந்தைகள். இவைகளெல்லாம் அல்லாஹ் நமக்களித்த நிஃமத்துக்களில் கட்டுப்பட்டவை. இந்த நிஃமத்துக்களுக்கு முதலில் அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்ய வேண்டும். இரண்டாவது அவைகளுடைய ஹக்குகளைப் பேண வேண்டும். மூன்றாவது அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.

Thursday, June 6, 2024

இதுவும் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.