Friday, March 15, 2024

கண்டும் காணாத கூட்டம்


இந்தப் பதிவின் இறுதியில்
2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌  ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (அல்குர்ஆன் : 5:78)

كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்க வில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (அல்குர்ஆன் : 5:79)

இந்த வசனத்தில் பனூஇஸ்ராயீல் நபிமார்களின் மூலம் சபிக்கப்பட்டதற்கு காரணமாக அல்லாஹ் மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறான். அதில் ஒன்று ; தீமைகளை ஒருவரை ஒருவர் தடுக்க வில்லை என்பது.

 நன்மையை ஏவி தீமையை தடுப்பது முஃமின்களிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்பாகும்.அவரே மக்களில் சிறந்தவர்.

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 3:110)

இந்த வசனத்தில் அல்லாஹ் நீங்கள் சிறந்த சமுதாயம் என்று கூறி விட்டு அதற்கான காரணத்தையும் கூறுகிறான். அதாவது நன்மையை ஏவுகிறீர்கள் தீமையைத் தடுக்கிறீர்கள் என்று சொல்கிறான். ஒரு முஃமினைப் பொறுத்த வரை அவன் நன்மைகளைச் செய்தால் மட்டும் போதாது. பிறருக்கு நன்மையை ஏவி அவர்களை செய்யும்படி தூண்ட வேண்டும். தீமைகளை விட்டும் அவன் ஒதுங்கியிருந்தால் மட்டும் போதாது. தீமைகளை விட்டு பிறரையும் தடுக்க வேண்டும்.அவனே சிறந்த முஃமினாக இருக்க முடியும்.

قام رجلٌ إلى النبيِّ ﷺ وهو على المنبرِ فقال يا رسولَ اللهِ أيُّ الناسِ خيرٌ قال خيرُ الناسِ أقرؤُهُمْ وأتقاهُمْ وآمَرُهُمْ بالمعروفِ وأنَهاهُمْ عنِ المنكرِ وأوصلُهم للرحمِ

நபி அவர்கள் மிம்பரில் இருக்கின்ற நிலையில் ஒரு மனிதர் எழுந்து மனிதர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் அதிகம் குர்ஆனை ஓதக் கூடியவர்,அதிகம் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர், அதிகம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர், அதிகம் உறவுகளைப் பேணி நடப்பவர் என்றார்கள். (மஜ்மவுஸ் ஸவாயிது)

قال ابن حزم: اتفقت الأمة كلها على وجوب الأمر بالمعروف والنهي عن المنكر بلا خلاف من أحد منهم

قال النووي: ((ثم إنه قد يتعين كما إذا كان في موضع لا يعلم به إلا هو، أو لا يتمكن من إزالته إلا هو، كمن يرى زوجته أو أولاده أو غلامه على منكر، أو تقصير في المعروف

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கடமை என்பதில் இமாம்களுக்கு இடையில் மாற்றுக்கருத்து இல்லை.அது ஃபர்ள் கிஃபாயா.ஆனால் தவறு நடக்கும் இடத்தில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அல்லது அந்த தவறை அவரைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது என்றால் அந்த குறிப்பிட்ட நபரின் மீது அது கடமையாகி விடும்.

ஒரு ஊரில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்கள் அவசியம் இருக்க வேண்டும். அதுவே அந்த ஊருக்கான பாதுகாப்பு.

قال القرطبي: قيل كل بلدة فيها أربعة فأهلها معصومون من البلاء إمام عادل لا يظلم وعالم على سبيل الهدى ومشايخ يأمرون بالمعروف وينهون عن المنكر ويُحرضون على طلب العلم والقرآن ونساؤهم مستورات لا يتبرجن تبرج الجاهلية الأولى

ஒரு ஊரில் நான்கு சாரார் இருந்தால் அந்த ஊர் மக்கள் சோதனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள் என்று அல்லாமா குர்துபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். 1. அநீதம் இழைக்காத நீதமான தலைவர். 2. நேரான பாதையில் இருக்கிற மார்க்க அறிஞர். 3. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து கல்வியைத் தேடுவதையும் குர்ஆனை ஓதுவதையும் ஆர்வமூட்டுகின்ற பெரியோர்கள். 4. தன் அழகை வெளிப்படுத்தாமல் தன்னை மறைத்துக் கொள்கின்ற ஒழுக்கான பெண்கள்.

 

நன்மையை ஏவாதவர்கள் இருந்தும் இல்லாதவர்களைப் போன்று.

سئل حذيفة رضي الله عنه عن ميت الأحياء, فقال: الذي لا ينكر المنكر بيده, ولا بلسانه, ولا بقلبه

தன் கரத்தாலோ நாவாலோ உள்ளத்தாலோ தவறைத் தடுக்காதவர் உயிர் இருந்தும் இல்லாதவர் என்று ஹுதைஃபா ரலி அவர்கள் கூறினார்கள்.

 

ஒரு சமூகம் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வில்லையானால் அந்த சமூகம் அல்லாஹ்வின் வேதனையை சந்திக்கும்.

قال أبو الدرداء رضي الله عنه: لتأمرن بالمعروف, ولتنهن عن المنكر, أو ليسلطن الله عليكم سلطاناً ظالماً, لا يجل كبيركم, ولا يرحم صغيركم, ويدعو عليه خياركم فلا يستجاب لهم, وتستنصرون فلا تنصرون, وتستغفرون فلا يغفر لكم

நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொண்டிருங்கள். இல்லையானால் பெரியோர்களை மதிக்காத சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாத அநியாயக்கார ஆட்சியாளரை உங்கள் மீது அல்லாஹ் சாட்டி விடுவான். உங்களில் சிறந்தவர் அவருக்கெதிராக துஆ செய்தாலும் அந்த துஆ ஏற்கப்படாது. அல்லாஹ்விடம் நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்காது. பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ்விடம் உங்களுக்கு மன்னிப்பு கிடைக்காது என அபுத்தர்தா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قال الإمام ابن العربي رحمه الله: الذنوب منها ما يعجل الله عقوبته, ومنها ما يمهل بها إلى الآخرة, والسكوت على المنكر تتعجل عقوبته في الدنيا بنقص الأموال والأنفس والثمرات

மனிதர்கள் செய்கின்ற சில குற்றங்களுக்காக அல்லாஹ் மறுமையில் தண்டிப்பான். சில குற்றங்களுக்கு உலகிலேயே தண்டனையைக் கொடுத்து விடுவான். தவறைப் பார்த்து தடுக்காமல் மௌனமாக இருப்பவர்களுக்கு அல்லாஹ் உலகிலேயே தண்டனையை வழங்கி விடுவான் என இப்னுல் அரபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

إنَّ أولَ ما دخل النَّقْصُ على بني إسرائيلَ أنه كان الرجلُ يَلْقى الرجلَ فيقولُ: يا هذا اتَّقِ اللهَ ودَعْ ما تَصْنَعُ فإنه لا يَحِلُّ لك ثم يَلْقاهُ من الغَدِ وهو على حالِهِ فلا يَمْنَعُهُ ذلك أن يكونَ أَكِيلَهُ وشَرِيبَهُ وقَعِيدَهُ فلما فعلوا ذلك ضرب اللهُ قلوبَ بعضِهم ببعضٍ ثم قال: لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرائِيلَ عَلى لِسانِ داوُدَ وَعِيسى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِما عَصَوْا وَكانُوا يَعْتَدُونَ كانُوا لا يَتَناهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ ما كانُوا يَفْعَلُونَ تَرى كَثِيرًا مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِينَ كَفَرُوا لَبِئْسَ ما قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ إلى قولِه فاسِقُونَ ثم قال: كلا واللهِ لَتَأْمُرُنَّ بالمعروفِ ولَتَنْهَوُنَّ عن المنكرِ ولَتَأْخُذُنَّ على يَدِ الظالمِ ولَتَأْطُرُنَّهُ على الحقِّ أَطْرًا ولَتَقْصُرُنَّهُ على الحقِّ قَصْرًا أو لَيَضْرِبَنَّ اللهُ بقلوبِ بعضِكم على بعضٍ ثم لَيَلْعَنَكُم كما لعنهم

பனூ இஸ்ரவேலர்களிடம்  நுழைந்த  குறைகளில் முதன்மையானது,  அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் செல்வார்.  அவரைப் பார்த்து  நீர் அல்லாஹ்வை பயப்படுவீராக!  பாவம் செய்து வருவதை விட்டு விடுவீராக!  பாவம் செய்வது உனக்கு கூடாது என்று கூறுவார்.  மறுநாளும் அதே பாவம் செய்த நிலையில் அவரை சந்திப்பார். (ஆனால் அப்போது அவரைத்தடுக்காமல்)  அவருடன் சாப்பிடுவார்.  உட்கார்ந்து இருப்பார்.  அவரை விட்டு விலகி இருக்க மாட்டார்.  இதை அவர்கள் செய்த போது அவர்களின் சிலரை சிலருடன் உள்ளத்தால் அல்லாஹ் இணைத்து விட்டான்  என்று  நபி அவர்கள் கூறிவிட்டு  பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.  பின்னர்  நபி அவர்கள்  அவ்வாறு அல்ல, அல்லாஹ்வின் மீது சத்தியமாக  நீங்கள் நல்லதை ஏவ வேண்டும். தீயதிலிருந்து தடுக்க வேண்டும்.  அநீதக்காரனின் கையை நீங்கள் பிடித்து  சத்தியத்தின் மீது இருக்கச் செய்து அந்த சத்தியத்திலேயே அவனை நிலைத்திருக்க செய்யவும் வேண்டும்.  இல்லையெனில்  உங்களில் சிலரை சிலரிடம்  இதயங்கள் மூலம் இணைத்து விடுவான்.  பின்பு அவர்களை சபித்தது போல் உங்களையும் சபித்து விடுவான் என்று கூறினார்கள். (ரியாளுஸ் ஸாலிஹீன்)

 

குர்ஆனின் கடும் எச்சரிக்கைக்குறிய வசனம்           

لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ‏

அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம். (அல்குர்ஆன் : 5:63)

وعن ابن عباس، قال: ما في القرآن آية أشد توبيخاً من هذه الآية

இந்த வசனத்தைப் போன்று கடும் எச்சரிக்கை உள்ள வேறு வசனம் குர்ஆனில் இல்லை என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

مثل القائم على حدود الله، والواقع فيها، كمثل قوم استهموا على سفينة، فأصاب بعضهم أعلاها، وبعضهم أسفلها، فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم، فقالوا: لو أنا خرقنا في نصيبنا خرقا، ولم نؤذ من فوقنا. فإن يتركوهم وما أرادوا، هلكوا جميعا، وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடையபங்கில்       (கீழ்த்தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டு விட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களைத் தடுத்தால் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (புகாரி ; 2493)

 

ஈஸா அலை அவர்களின் சமூகம் தீமையைப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றார்கள்.

وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ‌ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا‌  قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.” (அல்குர்ஆன் : 7:164)

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். (அல்குர்ஆன் : 7:165)

يُخْبِرُ تَعَالَى عَنْ أَهْلِ هَذِهِ الْقَرْيَةِ أَنَّهُمْ صَارُوا إِلَى ثَلَاثِ فِرَقٍ: فِرْقَةٌ(١) ارْتَكَبَتِ الْمَحْذُورَ، وَاحْتَالُوا عَلَى اصْطِيَادِ السَّمَكِ يَوْمَ السَّبْتِ، كَمَا تَقَدَّمَ بَيَانُهُ فِي سُورَةِ الْبَقَرَةِ. وَفِرْقَةٌ نَهَتْ عَنْ ذَلِكَ، [وَأَنْكَرَتْ](٢) وَاعْتَزَلَتْهُمْ. وَفِرْقَةٌ سَكَتَتْ فَلَمْ تَفْعَلْ وَلَمْ تَنْهَ، وَلَكِنَّهَا قَالَتْ لِلْمُنْكِرَةِ: ﴿لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا﴾ ؟ أَيْ: لِمَ تَنْهَوْنَ هَؤُلَاءِ، وَقَدْ عَلِمْتُمْ أَنَّهُمْ هَلَكُوا وَاسْتَحَقُّوا الْعُقُوبَةَ مِنَ اللَّهِ؟ فَلَا فَائِدَةَ فِي نَهْيِكُمْ إِيَّاهُمْ. قَالَتْ لَهُمُ الْمُنْكِرَةُ: ﴿مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ

واعْلَمْ أنَّ لَفْظَ الآيَةِ يَدُلُّ عَلى أنَّ الفِرْقَةَ المُتَعَدِّيَةَ هَلَكَتْ، والفِرْقَةَ النّاهِيَةَ عَنِ المُنْكَرِ نَجَتْ. أمّا الَّذِينَ قالُوا: ﴿لِمَ تَعِظُونَ﴾ فَقَدِ اخْتَلَفَ المُفَسِّرُونَ في أنَّهم مِن أيِّ الفَرِيقَيْنِ كانُوا ؟ فَنُقِلَ عَنِ ابْنِ عَبّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُما - أنَّهُ تَوَقَّفَ فِيهِ. ونُقِلَ عَنْهُ أيْضًا: هَلَكَتِ الفِرْقَتانِ ونَجَتِ النّاهِيَةُ، وكانَ ابْنُ عَبّاسٍ إذا قَرَأ هَذِهِ الآيَةَ بَكى، وقالَ: إنَّ هَؤُلاءِ الَّذِينَ سَكَتُوا عَنِ النَّهْيِ عَنِ المُنْكَرِ هَلَكُوا، ونَحْنُ نَرى أشْياءَ نُنْكِرُها، ثُمَّ نَسْكُتُ ولا نَقُولُ شَيْئًا تفسير رازي

நபி மூஸா அலை அவர்களின் கூட்டத்தில் மூன்று பிரிவினர்கள் இருந்தார்கள். 1.  மீன் பிடிக்கக் கூடாது என்று அல்லாஹ் தடுத்த அந்த நாளில் அல்லாஹ்வின் உத்தரவை மீறி மீன் பிடித்தவர்கள். 2.  அவர்களைத் தடுத்தவர்கள். 3. அவர்களைத் தடுக்காமல் மௌனமாக இருந்ததோடு, தடுத்தவர்களிடத்தில் சென்று அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவை மீறி நடக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை நிச்சயம் வரும். அவர்கள் அழிந்து போவார்கள் என்பது உறுதி. நீங்கள் ஏன் அவர்களைத் தடுக்கிறீர்கள். அதில் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்களை அவ்வாறே விட்டு விடுங்கள் என்று சொன்னவர்கள்.


இந்த மூன்று பிரிவினர்களில் அல்லாஹ்வின் உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் அல்லாஹ்வின் வேதனையை சந்தித்தார்கள். அவர்கள் செய்யக்கூடிய தவறைத் தடுத்து அவர்களை எச்சரிக்கை செய்தவர்களை அல்லாஹ் பாதுகாத்து விட்டான். பாவம் செய்யக் கூடியவர்களைத் தடுக்காமல் மௌனமாக இருந்தவர்கள் விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடம் இரண்டு கருத்து உண்டு. என்றாலும், இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அவர்களும் தண்டிக்கப்பட்டார்கள் என்றே கூறுகிறார்கள். இந்த வசனத்தை ஓதும் போதெல்லாம் அவர்கள் கண்ணீர் வடிப்பார்கள். தவறைப் பார்த்து மௌனமாக இருந்த இவர்கள் அழிந்து போய் விட்டார்கள். நாம் இன்றைக்கு எத்தனையோ தவறுகளைப் பார்க்கிறோம். எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்து விடுகிறோம். நம் நிலை என்னவாகுமோ என்று நினைத்து அழுவார்கள். (தஃப்ஸீர் ராஸீ)

2022 பெருமை வேண்டாம்

2023 கல் நெஞ்சும் கறையும்

வாஹிதிகள் பேரவை நன்மையில் உதவியாளர்களாக

2 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ்... அருமையான தகவல்கள். செயல் படுத்த அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்... ஆமீன்.

    தீமையை கண்டுக் கொள்ளாமல் இருந்ததினால் வேதனை தரப்பட்டவர்கள் மூஸா நபியின் சமுதாயம் தானே.
    தாங்கள் ஈஸா நபியின் சமூகம் என்று பதிவிட்டுள்ளீர்கள். தெரிந்துக் கொள்வதற்காக...

    ReplyDelete
    Replies
    1. தவறாக பதிவாகி இருக்கிறது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

      Delete