Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 42 فمن يعدل اذا لم يعدل الله ورسوله

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: لَمَّا كَانَ يَومُ حُنَينٍ آثَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الْإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ بْنَ حِصْنٍ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى نَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ، فَقَالَ رَجُلٌ: وَاللهِ إِنَّ هَذِهِ قِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللهِ، فَقُلْتُ: وَاللهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ، فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ، ثُمَّ قَالَ: «فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللهُ وَرَسُولُهُ؟»، ثُمَّ قَالَ: «يَرْحَمُ اللهُ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»، فَقُلْتُ: لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا[1]؛ متفق عليه

ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்கள் அந்தப் போரில் கிடைத்த கனிமத் பொருள்களை பங்கீடு செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா பின் மிஹ்ஸன் அவர்களுக்கும் அதே போல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் முக்கியமானவர்களுக்கும் கொடுத்தார்கள். அந்நாளில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இந்த பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்பட வில்லை, அல்லாஹ்வின் திருப்பியும் இதில் நாடப்பட வில்லை என்று ஒரு மனிதர் கூறினார். அதைக் கேட்டு விட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதை நான் நபி ஸல் அவர்களிடம் கூறுவேன் என்று சொல்லி விட்டு உடனே அவர்களிடம் வந்து அவர் கூறியதை சொன்னேன். அப்போது சிவப்பு சாயம் போல் அவர்களின் முகம் மாறியது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நீதமாக நடக்க வில்லை என்றால் வேறு யார் நீதமாக நடப்பார் என்று கூறி விட்டு, அல்லாஹ் மூஸா நபி அவர்களுக்கு அருள் புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர் நோவினை செய்யப்பட்டார். அப்போது அவர் பொறுமையாக இருந்தார் என்று கூறினார்கள். இந்த நிகழ்வுக்குப் பின்னர் ஒரு செய்தியை நபி ஸல் அவர்களிடம் நான் கூறாமல் இருப்பது குற்றமல்ல என்று நான் கூறிக் கொண்டேன். (புகாரி ; 3150)

ஹதீஸ் எண் 41 الا تستنصر لنا

 

فعن أبي عبد الله خباب بن الأرت -رضي الله عنه- قال: شكونا إلى رسول الله -صلى الله عليه وسلم- وهو متوسد بردة له في ظل الكعبة فقلنا ألا تستنصر لنا؟ ألا تدعو لنا؟ فقال: ((قد كان مَن قبلكم يُؤخذ الرجل فيُحفر له في الأرض، فيُجعل فيها، ثم يؤتى بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين، ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه ما يصده ذلك عن دينه، واللهِ ليتمنّ الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئبَ على غنمه، ولكنكم تستعجلون))[1]، رواه البخاري وفي رواية: "وهو متوسد بردة، وهو في ظل الكعبة، وقد لقينا من المشركين شدة"[2]

கஃபாவின் நிழலில் தனக்குரிய மேலாடையை தலையணையாக வைத்த நிலையில் படுத்திருந்த நபி ஸல் அவர்களிடம் நாங்கள் எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடக்கூடாதா எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யக்கூடாதா என்று கூறியவர்களாக முறையிட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் பிடிக்கப்பட்டு அவருக்காக பூமியில் குழி தோண்டப்பட்டு அதில் போடப்பட்டார். பின்பு ரம்பத்தைக் கொண்டு வரப்பட்டு அவரது தலையில் வைக்கப்பட்டு அறுக்கப்பட்டது. இரு பாதியாக அவர் அறுக்கப்பட்டார். எஞ்சிய அவரது இறைச்சியும் எலும்பும் இரும்புச் சீப்பால் சீவப்பட்டது. இது, அவரை அவரது மார்க்கத்தை விட்டும் மாற்ற வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப் படுத்துவான். சன்ஆ என்ற ஊரிலிருந்து ஹள்ர்மவ்த் என்ற ஊர் வரைக்கும் ஒரு பயணி அல்லாஹ்வைத் தவிர எவரையும் அஞ்ச மாட்டார். தன் ஆட்டுக்காக ஓநாயைக் கண்டும் பயப்பட மாட்டார். இந்த அளவிற்கு மாற்றம் ஏற்படும். என்றாலும் நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 3612)

Thursday, October 21, 2021

நபி நேசம் மட்டும் போதும்

 


அகிலத்தின் அருட்கொடையான அண்ணலம் பெருமான் நபிகள் நாயகம் அவர்களின் புகழை எடுத்துச் சொல்கின்ற மவ்லித் ஷரீஃபும் மீலாது ஷரீஃபும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வசந்தமான காலம் இது.

Thursday, October 14, 2021

ஹதீீஸ் எண் 40 لا يتمنين احدكم الموت

 

فعن أنس -رضي الله تعالى عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((لا يتمنينّ أحدكم الموت لضُر أصابه، فإن كان لابدّ فاعلاً فليقل: اللهم أحيني ما كانت الحياة خيراً لي، وتوفني إذا كانت الوفاة خيراً لي))([1]) متفق عليه

உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காக மரணத்தை ஆசைப்பட வேண்டாம். அப்படி ஒருவேளை அவர் செய்வதாக இருந்தால், இறைவா உயிரோடு இருப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக. மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக என்று கூறட்டும். (புகாரி ; 5671)

ஹதீஸ் எண் 39 من يرد الله به خيرا يصب منه

 

وعن ابي هريرة رض قال قال رسول الله صل من يرد الله به خيرا يصب منه رواه البخاري

யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவரை சோதிக்கிறான். (புகாரி ; 5645)

ஹதீஸ் எண் 38 انك توعك وعكا شديدا

وعن ابن مسعود -رضي الله عنه- قال: دخلت على النبي -صلى الله عليه وسلم- وهو يُوعَك، فقلت: يا رسول الله، إنك تُوعَك وعْكاً شديداً، قال: ((أجل، إني أُوعَك كما يوعك رجلان منكم)) قلت: ذلك أن لك أجرين؟ قال:((أجل، ذلك كذلك، ما من مسلم يصيبه أذى، شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته، وحُطت عنه ذنوبه كما تَحُطُّ الشجرةُ ورقها

இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நபி ஸல் அவர்களுக்கு காய்ச்சலாக இருந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். இறைத்தூதர் அவர்களே நீங்களும் கடும் காய்ச்சலினால் அவதிப்படுகிறீர்களே என்று கேட்டேன். ஆம் உங்களில் இருவருக்கு காய்ச்சல் ஏற்படுவது போல் நான் காய்ச்சலுக்கு ஆளாகிறேன் என்று கூறினார்கள். இதற்கு உங்களுக்கு இரண்டு கூலி உண்டா என்று கேட்டேன். ஆம் அவ்வாறு தான். ஒரு முஸ்லிமுக்கு முள் குத்துவது மேலும் அதற்கு மேலாக எந்த நோவினை ஏற்பட்டாலும் அதன் மூலம் அவனது குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல அவனது பாவங்கள் அவனை விட்டும் நீக்கப்படும் என்றார்கள். (புகாரி ; 5647)

Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 37 ما يصيب المسلم من نصب

فعن أبي سعيد وأبي هريرة -رضي الله عنهما- عن النبي قال: ما يصيب المسلم من نَصَب، ولا وَصَب، ولا هم، ولا حزن، ولا أذى، ولا غم، حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه

ஒரு முஸ்லிமுக்கு சிரமம் நோய் கவலை துக்கம் நோவினை கடுமையான மன உளைச்சல் மற்றும் அவனுடைய காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்திற்கும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான். (புகாரி ; 5641)

ஹதீஸ் எண் 36 اللهم اغفر لقومي فانهم لا يعلمون

 

عَنْ أَبِي عَبْدِالرَّحْمَنِ عَبْدِاللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْكِي نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ، صَلَوَاتُ اللهِ وَسَلَامُهُ عَلَيْهِمْ، ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، فَجَعَلَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ

ஒரு நபியை அவரது சமூகத்தினர் அடித்தார்கள். அவரை ரத்தம் சிந்த வைத்தார்கள். அவர் தன் முகத்தில் ரத்தத்தை துடைத்தவறாக இறைவா எனது இந்த சமூகத்தை மன்னிப்பாயாக நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார் என நபிமார்களில் ஒருவரை பற்றி நபி அவர்கள் கூறிய ஒரு சம்பவம் நான் இன்றும் நேரில் பார்ப்பதைப் போல இருக்கிறது. (புகாரி ; 3477)

ஹதீஸ் எண் 35 الا اريك امراة من اهل الجنة

 

عن عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ: إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ؛ فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ»، فَقَالَتْ: أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا

அதாஃ பின் அபீ ரபாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;

சொர்க்க வாதியான ஒரு பெண்ணை உனக்கு நான் காட்டட்டுமா என்று என்னுடைய உஸ்தாது இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சரி என்று நான் கூறினேன். இதோ இந்த கருப்பு நிற பெண் தான் என்று அவர்கள் கூறினார்கள். இப்பெண் ஒருநாள் நபி அவர்களிடம் வந்து நான் வலிப்பு நோயாளி. இதனால் என ஆடை விலகி விடும் நிலை ஏற்படுபவளாக நான் இருக்கிறேன். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் நீ விரும்பினால் பொறுமையாக இரு. உனக்கு சொர்க்கம் உண்டு. நீ நாடினால் உனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் நான் ஆடை திறக்கப்பட்டு விடும் நிலை உள்ளவனாக இருக்கிறேன். எனவே எனது ஆடை விலகாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டார். பெண்ணுக்காக நபி அவர்கள் துஆ செய்தார்கள். (புகாரி ; 5652)

ஹதீஸ் எண் 33 سالت رسول الله عن الطاعون

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَهَا أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللهُ تَعَالَى عَلَى مَنْ يشَاءُ، فَجَعَلَهُ اللهُ تَعَالَى رَحْمَةً لِلْمُؤْمِنينَ، فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ فِي الطَّاعُونِ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابرًا مُحْتَسِبًا يَعْلَمُ أَنَّهُ لَا يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; பிளேக் நோய் பற்றி நபி அவர்களிடம் நான் கேட்டேன். தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தும் வேதனையாகும். மேலும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதை அல்லாஹ் அருளாக ஏற்படுத்தி இருக்கிறான். தனக்கு அல்லாஹ் விதித்ததைத் தவிர நோய் ஏற்படாது என்பதை அறிந்து நோய் ஏற்பட்ட அந்த ஊரிலேயே பொறுமையாக நன்மையை எதிர் பார்த்தவனாக இருக்கும் ஒரு அடியானுக்கு ஷஹீதுடைய கூலியைப் போன்றது உண்டு என்று நபி அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் எண் 28 لما ثقل النبي جعل يتغشاه الكرب

 

عَنْ أنَسٍ - رَضِيَ اللهُ عَنْهُ - قَالَ: لَمَّا ثَقُلَ النَّبيُّ -صلى الله عليه وسلم- جَعَلَ يَتَغَشَّاهُ الْكَرْبُ، فَقَالَتْ فَاطِمَةُ - رَضِيَ اللهُ عَنْهَا -: وَاكَربَ أَبَتَاهُ. فَقَالَ: «لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ»، فَلَمَّا مَاتَ، قَالَتْ: يَا أَبَتَاهُ، أَجَابَ رَبًّا دَعَاهُ! يَا أَبَتَاهُ، جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ! يَا أَبَتَاهُ، إِلَى جبْرِيلَ نَنْعَاهُ! فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ - رَضِيَ اللهُ عَنْهَا -: أَطَابَتْ أنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللهِ -صلى الله عليه وسلم- التُّرَابَ؟![1]؛ رواه البخاري.

நபி அவர்களுக்கு நோய் ஏற்பட்ட போது மரண வேதனை அவர்களை சூழ்ந்து கொண்டது. அப்போது பாத்திமா ரலி அவர்கள் என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் இந்த நாளைக்கு பின் உன் தந்தைக்கு கஷ்டம் எதுவும் இல்லை என்றார்கள். அவர்கள் இறந்த போது என் அன்புத் தந்தையே என்று அழைத்து, தன்னை அழைத்த இறைவனுக்கு பதிலளித்து விட்டார்கள். அவர்களின் ஒதுங்குமிடம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கமாக இருக்கிறது.ஜிப்ரயீல் அலை அவர்களிடம் இதை எப்படி நாங்கள் தெரிவிப்போம் என்று கூறினார்கள். அடக்கம் செய்து விட்டு வந்த போது நபி அவர்கள் மீது மண்ணைப் போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டார்கள். (புகாரி ; 5647)

Thursday, September 30, 2021

ஹதீீஸ் எண் 32 ما لعبدي اللمومن عندي جزاء

 

عن أبي هريرة  أن رسول الله قال: يقول الله تعالى: ما لعبدي المؤمن عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة

முஃமினான என் அடியானுக்கு உலக மக்களில் பிரியமானவரை நான் கைப்பற்றி, பின்பு அவன் பொறுமையாக இருந்து நன்மையை எதிர் பார்த்திருந்தால் அவனுக்கு என்னிடம் கூலி சொர்க்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். (புகாரி ; 6424)

ஹதீீஸ் எண் 31 انما االصبر عند الصدمة الاوولي

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: مَرَّ النَّبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بامرأةٍ تَبكي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «اتَّقِي اللهَ وَاصْبِري»، فَقَالَتْ: إِلَيْكَ عَنِّي؛ فإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ، فَقِيلَ لَهَا: إِنَّه النَّبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابينَ، فَقَالَتْ: لَمْ أَعْرِفكَ، فَقَالَ: «إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى»[1]؛ متفق عليه

மண்ணரை அருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை கடந்து சென்ற நபி ஸல் அவர்கள், அல்லாஹ்வைப் பயந்து கொள். நீ பொறுமையாக இரு என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் என்னை விட்டு நீங்கள் செல்லுங்கள். எனது சோதனை போல் நீங்கள் சோதிக்கப் படவில்லை. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று கூறினாள. இவர்கள் நபி ஸல் அவர்கள் என்று அப்பெண்ணிடம் கூறப்பட்டது. உடனே அப்பெண்மனி நபி ஸல் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள். அந்த இடத்தில் காவலாளி எவருமில்லை. நான் உங்களை அறிய வில்லை என்று கூறினாள். அப்போது நபியவர்கள் பொறுமை என்பது கஷ்டத்தின் ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும் என்று கூறினார்கள். (புகாரி ; 1252)

ஹதீீஸ் எண் 29 ان لله ما اخذ

 

عن أسامة بن زيد بن حارثة -رضي الله عنهما- قال: أرسلت بنت النبي -صلى الله عليه وسلم- إنَّ ابني قد احتُضِر فاشْهَدنَا، فأرسَل يُقرِىءُ السَّلام، ويقول: «إنَّ لِلَّه ما أَخَذ ولَهُ ما أَعطَى، وكلُّ شَيءٍ عِنده بِأجَل مُسمَّى فَلتَصبِر ولتَحتَسِب». فأرسلت إليه تُقسِم عَليه لَيَأتِيَنَّها، فقام ومعه سعد بن عبادة، ومعاذ بن جبل، وأبي بن كعب، وزيد بن ثابت، ورجال -رضي الله عنهم- فَرفع إلى رسول الله -صلى الله عليه وسلم- الصَّبِي، فأَقعَدَه في حِجرِه ونَفسه تَقَعقَع، فَفَاضَت عينَاه فقال سعد: يا رسول الله، ما هذا؟ فقال: «هذه رَحمَة جَعلَها الله تعالى في قُلُوب عِباده» وفي رواية: «في قلوب من شاء من عباده، وإنَّما يَرحَم الله من عِبَاده الرُّحَماء

நபியின் மகள் ஜைனப் ரலி அவர்கள், என் மகன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எங்களிடம் நீங்கள் வர வேண்டும் என்று சொல்லி நபி ஸல் அவர்களிடம் ஆள் அனுப்பி வைத்தார்கள். அவர் சலாம் கூறியவராக திரும்பி வந்தார். அவரிடம் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவன் எடுத்துக் கொண்டது உண்டு. மேலும் அவனுக்கே அவன் கொடுத்ததும் உண்டு. அவனிடத்தில் ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட தவணையில் தான் இருக்கிறது. எனவே என் மகள் பொறுமையாக இருக்கட்டும். நன்மையை எதிர்பார்க்கட்டும் என்று கூறி அனுப்பினார்கள். தன்னிடம் கண்டிப்பாக நபியவர்கள் வர வேண்டும் என சத்தியமிட்டு கூறி மகளார் மீண்டும் ஒருவரை அனுப்பினார்கள். உடனே நபி ஸல் அவர்கள் எழுந்து வந்தார்கள். அவர்களுடன் ஸஃது பின் உபாதா முஆத் பின் ஜபல் உபை பின் கஃப் ஸைத் பின் ஸாபித் ஆகியோரும் மற்றும் சில நபித்தோழர்களும் சென்றார்கள். அப்போது நபி ஸல் அவர்களிடம் சிறுவர் தரப்பட்டார். அதுவரை தன் மடியில் வைத்தார்கள்.அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரை வடித்தன. உடனே ஸஃது ரலி அவர்கள் இறைத்தூதர் அவர்களே என்ன நீங்களும் அழுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இது தான் இரக்கமாகும். தன் அடியார்களின் இதயங்களில் இதை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 1284)

Monday, September 27, 2021

ஹதீஸ் எண் 27 عجبا لامر المومن

 

عن ابي يحيي صهيب بن سنان قال قال رسولُ اللهِ صلى الله عليه وسلم:"عَجَبًا لأمرِ المؤمنِ إِنَّ أمْرَه كُلَّهُ لهُ خَيرٌ وليسَ ذلكَ لأحَدٍ إلا للمُؤْمنِ إِنْ أصَابتهُ سَرَّاءُ شَكَرَ فكانتْ خَيرًا لهُ وإنْ أصَابتهُ ضَرَّاءُ صَبرَ فكانتْ خَيرًا لهُ "

ஒரு முஃமினுடைய காரியம் ஆச்சரியமானது.அவனுடைய காரியம் அனைத்தும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.ஒரு முஃமினைத்தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகிறது. (முஸ்லிம் ; 2999)

ஹதீஸ் எண் 26 من يستعفف يعفه الله

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِي اللَّهم عَنْهم إِنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ )) (صحيح البخاري)

அன்சாரிகளில் சிலர் நபியிடத்தில் வந்து உதவி கேட்டார்கள். நபியவர்கள் அவர்களுக்குக் கொடுத்தார்கள். மீண்டும் கேட்டார்கள். அப்போதும் கொடுத்தார்கள். மீண்டும் கேட்டார்கள். அப்போது நபியவர்கள் கொடுத்தார்கள். கடைசியாக அவர்கள் இடத்தில் இருந்து காலியாகி விட்டது. அப்போது என்னிடத்தில் உள்ள நலவானது எதையும் நான் உங்களுக்குத் தராமல் சேமித்து ஒளித்து வைக்க மாட்டேன். யார் பேணுதலாக நடக்கிறாரோ அவரை அல்லாஹ் பேணுதல் உள்ளவராக ஆக்கி விடுவான். யார் தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை தேவையற்றவராக ஆக்கிவிடுவான். யார் பொறுமையை மேற் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளர்களாக ஆக்கி விடுவான். பொறுமையை விட மிக விசாலமான சிறந்த கொடை எதையும் யாரும் வழங்கப்படுவதில்லை. (புகாரி ; 1469)

ஹதீஸ் எண் ; 25 القران جحة لك او عليك

 

عن أبي مالك الحارث بن عاصم الأشعري - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : (( الطهور شَطْرُ الإيمان ، والحمدلله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - أو تملأ - ما بين السماء والأرض،والصلاة نور، والصدقة بُرهان ،والصَّبْرُ ضِياءٌ، والقرآنُ حُجَّة لكَ أوعَليْكَ ، كُلُّ الناس يَغْدُو فبائِعٌ نفسَهُ فمُعْتِقـُها أو مُوبـِقـُها

தூய்மை ஈமானின் ஒரு பகுதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்பது நன்மையின் தட்டை நிரப்பும். சுப்ஹானல்லாஹி வல்ஹமது லில்லாஹ் என்பது வானம் மற்றும் பூமிக்கு இடையே உள்ளதை நிரப்பும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். குர்ஆன் உனக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருக்கும். ஒவ்வொரு மனிதரும் முயற்சிக்கிறார்கள். தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சிலர் தன்னை அழிவில் இருந்து விடுவித்து விடுகிறார்கள். சிலர் தன்னை அழிவில் போட்டுக் கொள்கிறார்கள். (முஸ்லிம் ; 223)

பாடம் 3 பொறுமை

 

ரியாளுஸ் ஸாலிஹீன் கிதாபின் மூன்றாவது பாடம் பொறுமையாகும். பொறுமையை மூன்று வகையாக மார்க்கம் பிரிக்கிறது. ஒன்று அல்லாஹ் கொடுக்கின்ற சோதனைகளில் பொறுமை கொள்ளுதல். தன் அடியார்கள் பொறுமையை மேற்கொள்கிறார்களா என்பதை சோதிப்பதற்குத் தான் அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு சோதனைகளைத் தருகிறான்.

Thursday, September 23, 2021

ஹதீஸ் எண் ; 24 يضحك الله الي رجلين

 

عن ابي هريرة رض ان رسول الله قال يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة ، يقاتل هذا في سبيل الله فيستشهد ، ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله فيستشهد

இரண்டு நபர்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்று விடுகிறார். இருவரும் சொர்க்கத்தில் நுழைகின்றனர்.அந்த இருவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதாக்கப்படுகிறார்.அவரைக் கொன்றவரோ அல்லாஹ்விடம் தவ்பா செய்து இஸ்லாத்தை ஏற்று மற்றொரு போரில் ஷஹீதாக்கப்படுகிறார். (புகாரி ; 2826)

ஹதீஸ் எண் ; 22 ان امراة من جهينة اتت

 

وَعَنْ أبي نُجَيْد-بِضَم النُّونِ عِمْرانَ بْنِ الحُصيْنِ الخُزاعيِّ رَضِي اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرأَةً مِنْ جُهينةَ أَتَت رَسُولَ الله وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَا، فقَالَتْ: يَا رسول الله أَصَبْتُ حَدًّا فأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ الله وَليَّهَا فَقَالَ: أَحْسِنْ إِليْهَا، فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي فَفَعَلَ، فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ ، فَشُدَّتْ عَلَيْهَا ثِيَابُها، ثُمَّ أَمَرَ بِهَا فرُجِمتْ، ثُمَّ صلَّى عَلَيْهَا. فَقَالَ لَهُ عُمَرُ: تُصَلِّي عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ زَنَتْ، قَالَ: لَقَدْ تَابَتْ تَوْبةً لَوْ قُسِمَتْ بَيْن سبْعِينَ مِنْ أَهْلِ المدِينَةِ لوسعتهُمْ، وَهَلْ وَجَدْتَ أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنفْسهَا للَّهِ ؟

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி அவர்களிடம் வந்தார். அப்பெண் விபச்சாரம் மூலம் கர்ப்பிணியாக இருந்தார். இறைத்தூதர் அவர்களே தண்டனைக்குரிய செயலை நான் செய்து விட்டேன். அந்த தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள் என்று கூறினாள். நபி அவர்கள் அவளின் பொறுப்பாளரை அழைத்து இவளை நல்ல விதமாக வைத்துக்கொள். குழந்தை பெற்று விட்டால் என்னிடம் அழைத்து வா என்று கூறினார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவள் வந்ததும் அவள் விஷயமாக தண்டனை தர நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அவள் மீது அவளின் ஆடைகள் சுற்றப்பட்டது. பின்பு அவளை கல்லால் எறிந்து கொல்ல கட்டளையிட்டார்கள். பிறகு அவளுக்கு ஜனாஸா தொழ வைத்தார்கள். அப்போது உமர் ரலி அவர்கள் இறைத்தூதர் அவர்களே விபச்சாரம் செய்து விட்ட இவளுக்கா தொழ வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது மக்களில் 70 நபர்களுக்கு பங்கிட்டு அவர்களுக்குச் சமமாக தரும் அளவுக்குறிய தவ்பாவை அவள் செய்து விட்டாள். அல்லாஹ்விற்காக தன்னை அர்ப்பணித்து விடுவதை விட சிறந்த ஒன்றை நீர் காணப் போகிறீரா என்று நபியவர்கள் கேட்டார்கள். (முஸ்லிம் ; 1696)

ஹதீஸ் எண் ; 23 لو ان لابن ادم واديا من ذهب

 

عن عبد الله بن عباس -رضي الله عنهما: أن رسول الله قال: لو أن لابن آدم وادياً من ذهب أحب أن يكون له واديان، ولن يملأ فاه إلا التراب، ويتوب الله على من تاب

நிச்சயமாக மனிதனுக்கு தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இரண்டு ஓடைகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். மண்ணைத் தவிர அவனுடைய வாயை வேறு எதுவும் நிரப்பாது. யார் தவ்பா செய்கிறானோ அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். (புகாரி ; 6437)

Sunday, September 19, 2021

20 வது ஹதீஸின் தொடர் ;-

 


1، அல்லாஹ்வின் ரஹ்மத்தும் அடியார்கள் மீது அவன் கொண்டிருக்கிற விசாலமான அன்பும் இந்த ஹதீஸின் மூலம் உணர்த்தப்படுகிறது.

ஹதீஸ் எண் ; 20 رجل قتل تسعة وتسعين

 

عن أبي سعيد سعد بن مالك بن سنان الخدري  عن نبي الله قال: كان فيمن كان قبلكم رجل قتل تسعة وتسعين نفسًا، فسأل عن أعلم أهل الأرض فدُل على راهب فأتاه فقال: إنه قتل تسعة وتسعين نفسًا، فهل له من توبة؟ فقال: لا، فقتله فكمل به مائة، ثم سأل عن أعلم أهل الأرض، فدُل على رجل عالم، فقال: إنه قتل مائة نفس، فهل له من توبة؟ فقال: نعم، ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا، فإن بها أناسًا يعبدون الله تعالى فاعبد الله معهم، ولا ترجع إلى أرضك، فإنها أرض سوء، فانطلق حتى إذا نصف الطريق أتاه الموت، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة الرحمة: جاء تائبًا مقبلاً بقلبه إلى الله تعالى، وقالت ملائكة العذاب: إنه لم يعمل خيرًا قط، فأتاهم ملك في صورة آدمي، فجعلوه بينهم -أي حكمًا- فقال: قيسوا ما بين الأرضيْن، فإلى أيتهما كان أدنى فهو له، فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد، فقبضته ملائكة الرحمة

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் இருந்தார். அவர் 99 கொலை செய்திருந்தார். (தவறை உணர்ந்த அவர்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தார். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டார். “இல்லை!என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்று நூறைப் பூர்த்தியாக்கி விட்டார்.

Thursday, September 16, 2021

ஹதீஸ் எண் ; 17- من تاب قبل ان تطلع الشمس

 

عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللهُ عَلَيْهِ

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுவதற்கு முன்பு யார் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் மன்னிக்கிறான். (முஸ்லிம் ; 2703)

Wednesday, September 15, 2021

ஹதீஸ் எண் ; 16 ان الله يبسط يده

 

عن أبي موسى عبد الله بن قيس الأشعري ، عن النبي قال: إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم

நிச்சயமாக அல்லாஹ் பகலில் குற்றம் இழைத்தவர் தவ்பா செய்வதற்காக இரவில் தன் கரத்தை விரிக்கிறான். இரவில் குற்றம் இழைத்தவர் தவ்பா தேடுவதற்காக பகலில் தன் கரத்தை விரிக்கிறான். இது சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் வரை. (முஸ்லிம் ; 2759

ஹதீஸ் எண் ; 14- فاني اتوب في اليوم اليه مائة مرة

وعن الاغر بن اليسار المزني رض قال: قال رسولُ الله -صلى الله عليه وآله وسلم-: يا أيّها الناس، توبوا إلى الله، فإني أتوب في اليوم إليه مئة مرة   رواه مسلم

மக்களே நீங்கள் இறைவனிடம் தவ்பாவைத் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளில் அவனிடம் நூறு முறை தவ்பா தேடுகிறேன். (முஸ்லிம் ; 2702)

ஹதீஸ் எண் ; 6- افاتصدق بثلثي مالي

 

فعن سعد بن أبي وقاص رضي الله عنه قال: (عادني (زارني) رسولُ الله صلى الله عليه وسلم في حجة الوداع، من وجعٍ أشفيتُ (قاربتُ) منه على الموت، فقلتُ: يا رسول الله! بلغني ما ترى من الوجع، وأنا ذو مالٍ، ولا يرثني إلا ابنة لي واحدة، أفأتصدقُ بثلثيْ مالي؟ قال: لا، قلتُ: أفأتصدقُ بشطرِه (نصفه)؟ قال: لا، الثلثُ، والثلثُ كثير، إنك إن تذَرَ ورثتكَ أغنياءَ، خيرٌ من أن تذَرَهم (تتركهم) عالةً (فقراء) يتكففون (يسألون) الناسَ، ولستَ تنفقُ نفقةً تبتغي بها وجه الله، إلا أُجِرْتَ بها، حتى اللقمةَ تجعلُها في فِي (فم) امرأتِك

ஸஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; இறுதி ஹஜ் நடந்த வருடம் எனக்கு கடுமையான வலி இருந்த போது என்னை நலம் விசாரிக்க நபியவர்கள் என்னிடத்திலே வந்தார்கள்.

ஹதீஸ் எண் ; 3- لا هجرة بعد الفتح

 

عن عائشة رضي الله عنها قالت: قال النبي صلى الله عليه وسلم «لَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا». متفق عليه

மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் என்பது கிடையாது. என்றாலும் அல்லாவின் பாதையில் போர் புரிவதும் தூய எண்ணமும் இருக்கிறது. போருக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் போருக்கு நீங்கள் கிளம்பி விடுங்கள். (புகாரி ; 4312)

Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் ; 10 - صلاة الرجل جماعة

 

عن أبي هريرة رض قال: قال رسول الله : صلاة الرجل في جماعة تزيد على صلاته في بيته وصلاته في سوقه بضعاً وعشرين درجة، وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء، ثم أتى المسجد لا يَنهَزه إلا الصلاة، لا يريد إلا الصلاة، فلم يخط خطوة إلا رُفع له بها درجة، وحُط عنه بها خطيئة، حتى يدخل المسجد، فإذا دخل المسجد كان في الصلاة ما كانت الصلاة هي تحبسه، والملائكة يصلون على أحدكم ما دام في مجلسه الذي صلى فيه، يقولون: اللهم ارحمه، اللهم اغفر له، اللهم تب عليه، ما لم يُؤذِ فيه، ما لم يُحدث فيه

ஜமாத்துடன் கூட்டாக ஒருவர் தொழுவது அவர் தன் கடையில் தன் வீட்டில் தொழுவதை விட

ஹதீஸ் எண் ; 9 - القاتل والمقتول في النار

 

وعن ابي بكرة نفيع بن الحارث الثقفي رض ان النبي صلى الله عليه وسلم قال: إذا التقى المسلمان بسيفيهما، فالقاتل والمقتول في النار. فقيل: يا رسول الله هذا القاتل، فما بال المقتول؟! قال: إنه كان حريصاً على قتل صاحبه

அபூபக்ரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாள்கள் மூலம் (சண்டையில்) சந்தித்தால்

ஹதீஸ் எண் ; 8 - يقاتل شجاعة

 

عن أبي موسى الأشعري-رضي الله عنه- قال: «سُئِلَ رَسُولُ الله -صلى الله عليه وسلم- عَنْ الرَّجُلِ: يُقَاتِلُ شَجَاعَةً، وَيُقَاتِلُ حَمِيَّةً، وَيُقَاتِلُ رِيَاءً، أَيُّ ذَلِكَ فِي سَبِيلِ الله؟ فَقَالَ رَسُولُ الله -صلى الله عليه وسلم-: مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ الله هِيَ الْعُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ الله

ஒருவர் வீரத்திற்காக போராடுகிறார்.

ஹதீஸ் எண் ; 7 ان الله لا ينظر

 

عن أبي هريرة رضي الله عنه - قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنَّ اللَّهَ لا يَنْظُرُ إلى اجسامكم ولا الي صُوَرِكُمْ  ولَكِنْ يَنْظُرُ إلى قُلُوبِكُمْ وأَعْمالِكُمْ  (رواه مسلم

நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்க்க மாட்டான். என்றாலும் உங்கள் உள்ளங்களையும் உங்களின் அமல்களையும் பார்ப்பான். (முஸ்லிம் ; 2564)

ஹதீஸ் எண் ; 5 - لك ما نويت

 

عن أبي يزيد معن بن يزيد بن الأخنس قال: كان أبي يزيدُ أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد، فجئت فأخذتها، فأتيته بها، فقال: والله ما إياك أردتُ، فخاصمته إلى رسول الله فقال: لك ما نويت يا يزيد، ولك ما أخذت يا معن[1]، أخرجه البخاري 

மஃன் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; என் தந்தை யஸீத் அவர்கள், சில தீனார்களை தர்மம் செய்வதற்காகக் கொண்டு வந்தார்கள்.

ஹதீஸ் எண் 4 ان بالمدينة لرجالا

 

عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال: كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال: «إِنَّ بِالْمَدِينَةِ لَرِجَالًا مَا سِرْتُمْ مَسِيرًا، وَلَا قَطَعْتُمْ وَادِيًا، إِلَّا كَانُوا مَعَكُمْ، حَبَسَهُمُ الْمَرَضُ».

 

وفي رواية: «إِلَّا شَرِكُوكُمْ فِي الْأَجْرِ»

 

நாங்கள் நபி அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம்.

ஹதீஸ் எண் ; 1 انما الاعمال بالنيات

 

عن عُمَرَ بْن الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لدُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி  அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்:

Thursday, August 5, 2021

துஆ கபூலாக வேண்டுமா ?

கடந்த வாரம் அடியார்கள்  தன்னிடம் துஆ கேட்பதை இறைவன் விரும்புகிறான்.  பதில் அளிப்பதற்கு காத்திருக்கிறான். துஆ கேட்காதவர்கள் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்.

Thursday, July 29, 2021

நம் சமூகத்தின் பலம் துஆ



நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் சமூகமாக இருக்கக்கூடிய நமக்கு அல்லாஹுத்தஆலா ஏராளமான நிஃமத்துக்களை வாரி வழங்கியிருக்கிறான். நாம் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப்பட்டுக் கொள்ள தகுந்த, காலம் முழுக்க நன்றி செலுத்தினாலும் ஈடுசெய்ய முடியாத ஒப்பற்ற  நிமத்துக்கள்

Thursday, July 22, 2021

குர்பானிக்குப் பின்....

 


அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ?  ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

Thursday, July 15, 2021

குர்பானி சொல்லும் செய்தி

 


உலகத்தில் நமக்கு எத்தனையோ இலட்சியங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கிறது.இவ்விரண்டும் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லாதவன் வெற்றி பெற முடியாது.வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன் சாதிக்க முடியாது.

Thursday, July 8, 2021

இறை இல்லங்களின் திறப்பும் நம் உணர்வும்

அல்லாஹுத்தஆலா உலகத்திலே மனிதனைப் படைத்து, அவன் ஒவ்வொரு நேரத்திலும் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு மற்றவர்கள் அவனிடத்திலே நடந்து கொள்வதற்கும் அவன் தன்னை சரி செய்து கொண்டு அடுத்த நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கும் எண்ணற்ற உணர்வுகளை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.

Thursday, April 22, 2021

பாவங்கள் சாதாரணமானதல்ல...

 உலகப்படைப்புக்களில் மனிதன் பலவீனமானவன். மறதியாளன். அறியாமையில் இருப்பவன். அவன் தன் பலவீனத்தாலும்  அறியாமையாலும் அல்லாஹ்வை மறந்ததினாலும் பாவம் செய்து விடுகிறான்.

Thursday, April 15, 2021

நோன்பாளிகள் பாக்கியமானவர்கள்


புனிதம் நிறைந்த பாக்கியம் பொருந்திய அருள் நிறைந்த ரமலான் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம்.

Thursday, April 8, 2021

நோன்பு சிறந்த மருத்துவம்

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புனிதம் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்.பாக்கியம் நிறைந்த அந்த ரமலான் மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவானாக! 

Thursday, April 1, 2021

கறை நல்லது



தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிற, களத்தில் நிற்கிற அத்தனை கட்சிகளும் தீவிரமான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிற இவ்வேளையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வும் தேர்தல் தொடர்பான மார்க்கத்தின் பார்வையும் ஷரீஅத்தின் வழிகாட்டுதலும் நமக்கு வேண்டும்.