Sunday, December 14, 2025

ஆறு ஹதீஸ்கள்

 

Muhammed (sal) said ;

"Whoever of you sees a wrong let him change it by his hand; and if he is not able, then with his tongue; and if he is not able, then with his heart and that is the weakest of faith."

உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தன் கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறா விட்டால், தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறா விட்டால், தன் மனதால் அதை வருத்தப்படட்டும்’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

INGLISH & TAMIL மூன்று ஹதீஸ்கள்

the Messenger of Allah mohammed sal  says:

1."The lawful is clear, and the unlawful is clear, and between the two of them are doubtful matters about which many people do not know. So he who avoids doubtful matters has sought to clear himself in regard to his religion and his honor, but he who falls into doubtful matters [then] falls into the unlawful, like the shepherd who pastures around a private area, all but grazing therein. Undoubtedly, every sovereign has private property, and indeed, the private property of Allah is His prohibited matters. Undoubtedly, within the body is a morsel of flesh which, when it is good, the whole body is good; but when it is corrupt, the whole body is corrupt. Indeed, it is the heart."

உரையாடல் - ஆண் பெண்

 

மாணவன்

 

1 ; இந்த உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சி, ரொம்ப மோசமாப் போச்சி!!!

2 ;வேற யாரப்பாத்து சொல்றது? உங்களால தான் இந்த உலகமே கெட்டுப்போச்சி.

உரையாடல் - வட்டி

 

மாணவி - 1

 

1, அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.அக்கா அஸ்ஸலாமு அலைக்கும். அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்ம்ம்ம்ம்ம்

என்னக்கா இத்தன தடவ ஸலாம் சொல்லிட்ட பதிலே சொல்லவே மாட்டேங்குறீங்க. உங்களுக்கு என்ன காது கேக்கலியா

உரையாடல் - முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?

 

 

நான்ஸி 1

1, ஹை ரோஸி எப்டி இருக்க

2, நானும் நல்ல இருக்கேன், அப்றம் ஏன் ஒரு மாதிரியா இருக்க, எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லயா ?

உரையாடல் - தாய்மை

மாணவி - 1

வயிற்றில் குழந்தையைச் சுமந்திருக்கும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.உறவினர்கள் எல்லாரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த தாயோ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள், கதறிக் கொண்டிருந்தாள்.

உரையாடல் - வரதட்சணை

மாணவன் - 1

 

1 ; ஹலோ சார் உங்கப் பெயர் என்ன?                                                                  

2 ; உங்க பிறப்பு வளர்ப்ப பத்தி சொல்ல முடியுமா சார்?                                

3 ; நீங்க எந்த மதம் சார்?                                                                                             

4 ; இப்ப நீங்க இருக்குறது ?  

உரையாடல் - முஸ்லிம்களின் இன்றைய நிலை

 

மாணவன்

 

1.       அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி

2.      இல்லம்மா ஹதீஸ பத்தி உனக்கு தெரியுமா

3.       . ஹதீஸ்னா என்ன மா

4.        சரி மா நீ ஹதீஸ் படிச்சிருக்கிறியா?

உரையாடல் - குர்ஆன்

 

மாணவன் - 1

 

1, அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே.                                       

2, ஒன்னும் இல்லண்ணே நாளைக்கு எங்க ஸ்கூல்ல குர்ஆன் ஒரு அற்புதம் அப்டிங்ற தலைப்புல கேள்வி பதில் போட்டி நடக்குது.அதுல சில கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் தெரியல. நீங்க தான் குன்றத்தூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்ல நடக்குற சிராஜுல் ஹுதா மதரஸாவுல ஓதுறீங்கள்ள... அதனால தான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.      

சுலைமான் அலை மற்றும் எறும்பு

 

மாணவன் -1

1 அஸ்ஸலாமு அலைக்கும்

 2 மனிதனைக் கண்டால் நீ ஏன் விரண்டோடுகிறாய்... ?

 3 ஆம் நீ சொல்வது உண்மை தான். மனிதன் மறதியில் தான் இருக்கிறான். சரி.. நீ நிர்வானமாக ஏன் திரிகிறாய் ஆடை அணிந்து திரியலாமே?

ஸலாத்துல்லாஹ்... ஸலாமுல்லாஹ்...

 

 

صَلَاةُ الله سَلَامُ الله * عَلَى طَهَ رَسُولِ الله

صَلَاةُ الله سَلَامُ الله * عَلَى يس حَبِيبِ الله

நபி வாழும் மா மதினா

 

நபி வாழும் மா மதினா நான் அங்கு வருவேனா... ?

பூ மணக்கும் உங்கள் ரவ்ளா கண்ணால் நான் தழுவேனா...?

Friday, December 12, 2025

மனித உரிமை மீறல்

 

 
                                          

உலகில் இருக்கிற முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைபிடித்துக் கொண்டிருக்கிற இஸ்லாம், மனித வாழ்வின் மிகச்சிறந்த வாழ்க்கை நெறியாக இருக்கிறது. மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நுழைந்து தன் தீர்க்கமான கருத்துக்களை பதிவு செய்திருப்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அந்த வகையில் மனித உரிமைகள் குறித்து தெளிவாக இஸ்லாம் பேசியிருக்கிறது. மனிதனுடைய எண்ணற்ற உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, உரிமைகள் மீறப்படுகிற இன்றைய சூழலில் அது குறித்து சிந்திக்க வேண்டும்.

Friday, December 5, 2025

வித்தியாசமான நீதிபதிகள்

பரபரப்பும் பரிதவிப்பும் நிறைந்த இன்றைய உலகில் அனைவருமே எதிர்பார்க்கின்ற விஷயங்களில் ஒன்று அமைதி. குடும்பத்திலும் தனி மனித வாழ்விலும் ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும் ஏன் உலகம் முழுக்க அமைதி ஏற்பட வேண்டும் என்பது தான் அனைவருடைய கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் அது வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது நிஜத்தில் எங்கும் அமைதியை பார்க்க முடியவில்லை.

Friday, November 28, 2025

மன உளைச்சல் நீங்கி நிம்மதி பெருகுவதற்கான வழிகள்


 

உலகில் கவலைகள் இல்லாத எந்த மனிதரும் இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையில் கவலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலை. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாணவனுக்கு கவலை.கல்விப் பயணத்தை முடித்தவனுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை. நல்ல வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே என்ற கவலை ,செட்டில் ஆகி விட்டால் கல்யாணம் செய்ய வேண்டுமே என்ற கவலை, கல்யாணம் செய்து விட்டால் குழ்ந்தை பிறக்க வேண்டுமே என்ற கவலை,குழந்தை பிறந்தால் அதை நல்ல வளர்க்க வேண்டுமே என்ற கவலை. அதற்குப் பிறகு அவர்களை படிக்க வைக்க வேண்டும், அவர்கள் நல்ல மார்க் வாங்க வேண்டும், அவர்கள் நல்ல பணியில் சேர வேண்டும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இப்படி கவலைகள் மரணம் வரை நம்மை விடாது துறத்திக் கொண்டே இருக்கும்.

Friday, November 14, 2025

Children's Day - குழந்தைகள் தினம்

 

இன்று நவம்பர் 14. நாடு முழுக்க சில்ட்ரன்ஸ் டே – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையும் இருந்தது. குழந்தைகள் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 1955 ல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி இந்தியாவை நிறுவினார். குழந்தைகளின் நலனில் தனி கவனம் செலுத்தியதாலும் அந்த கவனத்தை சமூகத்திற்கு உணர்த்தியதாலும் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ம் தேதியை இந்த நாடு குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது.