Friday, April 25, 2025

வீரம் செறிந்த சிறார்கள்

 

இஸ்லாம் பாராட்டும் உயர்ந்த குணங்களில் ஒன்று வீரமும் துணிவும். யாருக்கும் அஞ்சாமல் எதையும் துணிவோடு எதிர் கொள்கின்ற குணம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டும். அது ஒரு முஃமினின் பண்பு என்று இஸ்லாம் கூறுகின்றது.

Thursday, March 20, 2025

தராவீஹ் 20 - இஃதிகாஃப்

 கடைசி பத்தில் குறிப்புகள் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



இன்ஷா அல்லாஹ் நாளை ரமலான் மாதத்தின் கடைசி பகுதியை அடைய இருக்கிறோம். இந்த பகுதியில் புனிதம் நிறைந்த லைலத்துர் கத்ர் இரவு இடம்பெற்றிருக்கிறது.

Wednesday, March 19, 2025

தராவீஹ் 19 - அனைத்தையும் பெற்றுத்தர வல்லது

 



قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.

(அல்குர்ஆன் : 38:35)

Tuesday, March 18, 2025

தராவீஹ் 18 - வாய்ப்புக்கள் ஒரு முறை தான் கதவைத் தட்டும்

 

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்). (அல்குர்ஆன் : 35:37)

Monday, March 17, 2025

தராவீஹ் 17 - பத்ர் தரும் படிப்பினைகள்

இன்று பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தினமாக இருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்க்களம் பத்ர். இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கும் உலகம் முழுக்க பரவி விரவுவதற்கும் காரணமான ஒரு போர்க்களம். பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் அந்த போர்க்களத்தின் வழியாக ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கினான். அவற்றில் சிலதை நாம் இன்றைக்கு சிந்திக்கலாம்.